வியாழன், 26 பிப்ரவரி, 2015

நண்டு வறுவல்...

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம் நண்டுவறுவல் செய்யலாம் வாங்க..
செட்டிநாடு நண்டு வறுவல்
செட்டிநாடு முறையில் சுவையான நண்டு வறுவல் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
நண்டு – 5
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி

தனியா – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், தனியா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும்
நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.

Thanks- kulasaivaralaru

எலும்பு சால்னா செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
  எலும்பு சால்னா ---
 அசைவ குழம்புகளில் சால்னா ருசியானது. ரசம் மற்றும் `சூப்` போல உறிஞ்சி சுவைத்துக் கொண்டே சாப்பிட வைத்துவிடும். எலும்புகளை மட்டும் சேர்த்து செய்யப்படும் சால்னா இன்னும் சுவையாக இருக்கும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 1/4 மூடி அரைக்கவும்
வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)
எண்ணெய் - தாளிக்க
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை

* ஆட்டெலும்பைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

* எண்ணையைக் காய வைத்து சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* அடுத்து வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கவும், இதனுடன் எலும்பையும் சேர்த்து வதக்கவும்.

* மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும்.

* கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு வேக விடவும். உப்பை சரி பார்க்கவும்.

* எலும்பிற்குப் பதிலாக குருமா காய்கறிகளைப் பொடியாக `கட்' செய்து வைத்து இதே முறைப்படி சால்னா தயாரிக்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
  1. கடுகு – 2 டேபிள்ஸ்பூன்
  2. புளி – தேவையான அளவு
  3. காய்ந்த மிளகாய் – 2
  4. தேங்காய் துண்டு – 2
  5. எண்ணெய் – தேவையான அளவு
  6. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  1. கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
  2. தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#sthash.GZIxdxXu.dpuf
தேவையானப் பொருட்கள்:
  1. கடுகு – 2 டேபிள்ஸ்பூன்
  2. புளி – தேவையான அளவு
  3. காய்ந்த மிளகாய் – 2
  4. தேங்காய் துண்டு – 2
  5. எண்ணெய் – தேவையான அளவு
  6. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  1. கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
  2. தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#sthash.GZIxdxXu.dpuf

வற்றல் வகைகள் செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தமிழ் மன்றத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.
 வற்றல் வகைகள் செய்யலாம் வாங்க..
(1)சுண்டை வற்றல்;
    ஒரு படி அளவுள்ள விளைந்த சுண்டைக்காய்களைப் பொறுக்கி எடுத்து க்கழுவி,வடிகட்டி அம்மியில் வைத்து லேசாக தட்டி நசுக்கிப்பிளந்து அரை லிட்டர் புளிப்பான மோரில்  ஒரு பிடி அளவு உப்பு,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கரைத்து இத்துடன் பிளந்த சுண்டைக்காயைப்போட்டு மூடி வைக்கவும்இரண்டு நாட்களுக்கு கிளறி சுண்டைக்காய்களை நன்கு ஊறவைக்கவும்.பின்னர் மோரைவிட்டு எடுத்து வெயிலில் காயவைக்கவும்.சுமாராகக் காய்ந்த பிறகு அதே மோரில் மீண்டும் ஊறவைக்கவும்.இவ்வாறாக மோர் முழுவதும் காலியாகும்வரை கிளறி கிளறி ஊறவைத்து ஊறவைத்து காயப்போட்டு எடுத்து டின்களில் போட்டு பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
இவ்வாறாக,
 மோர் மிளகாய் வற்றல்,பாகற்காய் வற்றல்,கத்திரிக்காய் வற்றல்,மணத்தக்காளி வற்றல்,வெண்டைக்காய் வற்றல்,அவரைக்காய் வற்றல்,கொத்தவரைக்காய் வற்றல் போன்ற வற்றல்வகைகளையும் செய்யலாம்..

பருப்பு ரசம்உட்பட ரச வகைகள் வைக்கலாம் வாங்க...

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தமிழ் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறேன்.
         பருப்பு ரசம்,தக்காளி ரசம்,மிளகு ரசம்,எலுமிச்சை ரசம்,சீரக ரசம்,தூதுவளை ரசம் வைக்கலாம் வாங்க...
  (1) பருப்பு ரசம்;
 தேவையான பொருட்கள்;
 துவரம்பருப்பு 100கிராம்,புளி எலுமிச்சை அளவு,மிளகாய் வற்றல் ஐந்து,மிளகு ஒரு ஸ்பூன்,மல்லிவிதை ஒரு ஸ்பூன்,சீரகம் மூன்று ஸ்பூன்,பூண்டு நான்கு பல்,பெருங்காயம் சிறிதளவு,தேவையான அளவு கடுகு,கறிவேப்பிலை,மஞ்சள் தூள்,கொத்துமல்லித்தழை,உப்பு ஆகியன.
செய்முறை;
 துவரம்பருப்பை வேகவைத்து எடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்,புளியைக் கரைத்து உப்பு மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை போட்டு கொதிக்கவிடவும்,மிளகு,சீரகம்,கொத்துமல்லிவிதை,கறிவேப்பிலை,பூண்டு வைத்து கரகரப்பாக நுணுக்கி வெந்த பருப்புத்தண்ணீரில் போட்டு கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்,தேவைப்பட்டால் வெல்லம் சிறிதளவு சேர்க்கவும்.அதன்பிறகு கொதித்துவந்து நுரை கட்டியதும் கடுகு தாளித்து கொத்துமல்லித்தழை,கறிவேப்பிலையை போட்டு இறக்கிவைக்கவேண்டும்.ரசத்திற்கு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கக் கூடாது.
          கவனி; சாம்பார் மற்றும் ரசவகைகளுக்கு துவரம்பருப்பு,புளி,மிளகாய்வற்றல்,கொத்துமல்லிவிதை இந்த நான்கும் அவசியம்.தேவைப்பட்டால் சீரகம்,பூண்டு,பெருங்காயம்,கொத்துமல்லித்தழை,தக்காளி இவைகளையும் சேர்க்கலாம்  என்பதை தெரிந்துகொள்ளுங்க...
 (2)சீரக ரசம்;
  பருப்பு ரசத்தைப்போலவே செய்து  கூடுதலாக சீரகம் இரண்டு ஸ்பூன் சேர்க்கவும்.
(3)தக்காளி ரசம்;
            பருப்பு ரசத்தைப்போலவே செய்து புளியை மட்டும் பாதியாக குறைத்து 200கிராம் தக்காளி நறுக்கி கரைத்து சேர்த்தால் போதும் தக்காளி ரசம் தயார்..
(4)எலுமிச்சை ரசம்;
        பருப்பு ரசத்தைப்போலவே செய்து புளிக்குப்பதிலாக மூன்றுஎலுமிச்சை மட்டும் பிழிந்து பச்சை மிளகாய் எட்டு சேர்க்கவும்.எலுமிச்சை ரசம் தயார்.
(5)மிளகு ரசம்;
 ரசப்பொடிக்குப்பதிலாக ஒரு மேஜைக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து துவரம்பருப்பு இரண்டு பிடி புளி எலுமிச்சை அளவு,பெருங்காயம் சிறிதளவு,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை,மஞ்சள்தூள் அரை ஸ்பூன் தேவையான உப்பு சேர்த்து செய்யவும்.
(6)தூதுவளைரசம்;
         மிளகு ரசத்தில் தூதுவளை இலை ஒரு பிடியும் வாதநாராயணன் கொழுந்து தேவையான அளவும் சேர்க்கவும். 

ரசப்பொடி தயாரிப்பது எப்படி? 
        
 மிளகாய் வற்றல், மல்லித்தூள், மிளகு,சீரகம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு  இவைகளை வறுத்து கலந்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்வது ரசப்பொடி ஆகும்.
 

புதன், 25 பிப்ரவரி, 2015

.புளியோதரை செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கம் வாங்க.......புளியோதரை செய்யலாம் வாங்க..
 தேவையான பொருட்கள் அரிசி 400கிராம்,புளி எலுமிச்சை அளவு,மிளகாய் வற்றல் பத்து,நல்லெண்ணெய் நூறுகிராம்,முந்திரிப்பருப்பு அல்லது நிலக்கடலை இருபது கிராம்,கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன்,மல்லித்தூள் இரண்டுஸ்பூன்,கறிவேப்பிலை,உப்பு,கடுகு,உளுந்து,பெருங்காயம் தேவையான அளவு,
செய்முறை
 சோற்றை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் காய்ந்தபிறகு கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து,கடலைப்பருப்பு வறுத்து இத்துடன் பெருங்காயத்தையும் போடவும்.மிளகாயை இரண்டிரண்டாக கிள்ளிப்போட்டு பொன்னிறமாக வறுத்தபிறகு புளியை கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும்.மல்லித்தூள் சேர்த்து தேவையானஅளவு உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் மேலாக வரும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.அடுப்பிலிருந்து திறக்கும்போது கறிவேப்பிலையை போடவும்.முந்திரி அல்லது நிலக்கடலையை தனியே வறுத்து சோற்றில் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிய பிறகு புளிக்காய்ச்சலையும் சேர்த்து சோற்றை நன்கு கிளறவும்

தக்காளிச் சோறு செய்யலாம் வாங்க

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு வாங்க..தக்காளிச் சோறு செய்யலாம் வாங்க...
 தேவையான பொருட்கள்
 அரிச 400கிராம்,தக்காளி கால் கிலோ கிராம்,நாட்டுத்தக்காளி சேர்த்தால் புளிப்பு அதிகமாக இருக்கும்.பெரிய வெங்காயம் ஒன்று,பச்சை மிளகாய் நான்கு,மிளகாய்த்தூள் இரண்டு  ஸ்பூன்,மஞ்சள் தூள் கால் ஸ்பூன்,கொத்துமல்லித்தூள் ஒரு ஸ்பூன்,தாளிக்க எண்ணெய் கடுகு,உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலை,உப்பு தேவையான அளவு 
செய்முறை
 சோற்றை குழைந்துவிடாமல் வேகவைத்துக்கொள்ளவும்,தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வெங்காயத்தை நீளமாக பொடியாக  நறுக்கிவைத்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,தாளித்து அத்துடன் தக்காளி,வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு சுருள வதக்கிக்கொள்ளவும்,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை நீங்கியபிறகு இறக்கிவைத்து சோற்றுடன் கலந்து அத்துடன் கறிவேப்பிலையை பச்சையாக சேர்த்துக்கிளறவும்.தொட்டுக்கொள்ள வெங்காயத்தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.

எலுமிச்சை சோறு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு வாங்க..எலுமிச்சை சோறு செய்யலாம் வாங்க...
 அரிசி 400கிராம்,எலுமிச்சை பழம் 2,பச்சைமிளகாய்10,கடுகு ஒரு ஸ்பூன்,உளுந்து ஒரு ஸ்பூன்,கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன்,வெந்தயம் கால் ஸ்பூன்,பெருங்காயம் சிறிதளவு,முந்திரி ஐம்பது கிராம்,அல்லது நிலக்கடலை சேர்க்கலாம்.கறிவேப்பிலை,மஞ்சள்தூள்,எண்ணெய்,உப்பு தேவையான அளவு 
செய்முறை;
 முதலில் சோற்றை உதிரியாக வருமாறு குக்கரில் வழக்கமாக ஊற்றும் தண்ணீரீல் அரைப்பங்கு குறைத்து ஊற்றி சாதமாக வேகவைத்துக்கொள்ளவும். எலுமிச்சைப்பழத்தை கசப்பில்லாமல் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்துக்கொள்ளவும்,வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு,உளுந்து,வெந்தயம் தாளித்து எலுமிச்சைச்சாற்றில் சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அதில் முந்திரிப்பருப்பை சேர்த்து அளவாக வறுத்து சோற்றில்கொட்டிக் கலக்கி இத்துடன் எலுமிச்சைச்சாற்றுக்கலவையையும் சேர்த்து சோற்றை கரண்டியால் நன்கு கிளறி விடவும்.கவனி கடலைப்பருப்பையும் ,முந்திரியையும் எலுமிச்சைச்சாற்றில் சேர்த்தால் புளிப்பு ஏறிவிடும். அதனால்தான் தனியாக வறுத்துக்கொள்ள கூறியுள்ளேன். 
எலுமிச்சை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை,மிளகாய்,பூண்டு,உப்பு வைத்து அரைத்த துவையல் சிறந்தது.