சனி, 15 மார்ச், 2014

இலக்கியம் சுவை........

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.அன்னைத்தமிழ் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறோம்.இதோ முகநூல் நண்பர் திரு.தாமோதர் சந்துரு அவர்களது தமிழ் பதிவு.......

முன்னவன் றனையு ளத்து முன்னமுன் னத்தெ விட்டாக்
கன்னலோ வமுதோ பாகோ கற்கண்டோ வெனத்தித் திக்கும்
இன்னன்மே வாத வன்றா னெங்கணு நிறைந்தி ருந்தும்
அன்னையை நீத்த சேய்போ லையனை நீத்தாய் நெஞ்சே.

ஆண்டவனை நினைக்க நினைக்கக் கரும்பு, அமுது, வெல்லப்பாகு, கற்கண்டு முதலிய போன்று இனிக்கும். துன்பம் அணுகாது; எங்கும் நிறைந்த அவனைத் தாயை நீத்த சேய்போல் நெஞ்சமே நீத்தனையே.