ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

வாங்க..பேசலாம்..! ரவி தங்கதுரை

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.நம்ம மரியாதைக்குரிய  ரவி தங்கதுரை ஐயா  அவர்கள் முகநூலில் ''வாங்க. பேசலாம் ....'' என்னும் தலைப்பில் விவாதமேடை அமைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.நீங்களும் ஒருமுறை விவாதத்தில் கலந்துகொள்ளலாமே!
பேசலாம்..  வாங்க..!

கடந்த இரு வாரங்களின்  விவாத மேடையைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக  நாளையும் நாம் மற்றொரு தலைப்பின் கீழ் விவாதிக்க இருக்கிறோம்.

விவாதங்கள் தொடங்குவதற்கு முன் நமது விவாத மேடைப் பற்றி, ஏற்கனவே நெறிமுறைப் படுத்தப்பட்ட  சில விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.

1. தங்கள் கருத்துக்கள் தமிழில் அல்லது தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
2. விவாதங்கள் அனைத்தும்  பொதுவில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு நமது எழுத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்..
3. பதிவின் நோக்கம் திசை மாறும் வகையில் மாற்றுக் கருத்துக்களை விவாதிப்பதும், தலைப்பைப் பற்றி ஆலோசிப்பதும் மறுக்கப் படுகிறது.
4. விவாதங்களின் நடுவே அரட்டை அடிப்பதையும், நலம் விசாரிப்பதையும், காலை, மதிய மற்றும் இரவு வணக்கங்கள் சொல்வதையும் கண்டிப்பாக தவிர்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
5. விவாதங்களில் கலந்துக் கொள்ளும் தோழர்கள் மற்றும் தோழிகளின் மனம் வருத்தப்படாதவாறு வார்த்தைகளையும், எழுத்துக்களையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
6. விவாதங்களில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் நண்பர்கள் விரும்பினால்,  Tag செய்யப்படும்.
7. நமது விவாதங்களில் மதம், சாதியைக் குறிப்பிட்டுவதை அறவேத் தவிர்த்து விடுங்கள்.
8. விவாதங்கள் நாளைக் காலைத் தொடங்கி, கிட்டத்தட்ட 24 மணி நேரம் நீடிக்கும்.  
9. நண்பர்கள் அனைவரும் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ளலாம்.
10. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பைப் பற்றி கருத்துத் தெரிவிக்கலாமேத் தவிர, விவாதிப்பதைத் தவிர்த்து விடலாம்..  

- ரவிதங்கதுரை
  






பேசலாம்.. வாங்க..!
கடந்த இரு வாரங்களின் விவாத மேடையைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக நாளையும் நாம் மற்றொரு தலைப்பின் கீழ் விவாதிக்க இருக்கிறோம்.
விவாதங்கள் தொடங்குவதற்கு முன் நமது விவாத மேடைப் பற்றி, ஏற்கனவே நெறிமுறைப் படுத்தப்பட்ட சில விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.
1. தங்கள் கருத்துக்கள் தமிழில் அல்லது தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
2. விவாதங்கள் அனைத்தும் பொதுவில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு நமது எழுத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்..
3. பதிவின் நோக்கம் திசை மாறும் வகையில் மாற்றுக் கருத்துக்களை விவாதிப்பதும், தலைப்பைப் பற்றி ஆலோசிப்பதும் மறுக்கப் படுகிறது.
4. விவாதங்களின் நடுவே அரட்டை அடிப்பதையும், நலம் விசாரிப்பதையும், காலை, மதிய மற்றும் இரவு வணக்கங்கள் சொல்வதையும் கண்டிப்பாக தவிர்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
5. விவாதங்களில் கலந்துக் கொள்ளும் தோழர்கள் மற்றும் தோழிகளின் மனம் வருத்தப்படாதவாறு வார்த்தைகளையும், எழுத்துக்களையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
6. விவாதங்களில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் நண்பர்கள் விரும்பினால், Tag செய்யப்படும்.
7. நமது விவாதங்களில் மதம், சாதியைக் குறிப்பிட்டுவதை அறவேத் தவிர்த்து விடுங்கள்.
8. விவாதங்கள் நாளைக் காலைத் தொடங்கி, கிட்டத்தட்ட 24 மணி நேரம் நீடிக்கும்.
9. நண்பர்கள் அனைவரும் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ளலாம்.
10. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பைப் பற்றி கருத்துத் தெரிவிக்கலாமேத் தவிர, விவாதிப்பதைத் தவிர்த்து விடலாம்..

- ரவிதங்கதுரை

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தமிழெழுத்துக்கள்-247

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். தமிழெழுத்துக்களின் சிறப்பு காண்க.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
-Vinod Kamaraj / Chennai, Tamil Nadu
04.february.2012
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த