வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பாவாடை தாவணி!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். பாவாடை தாவணியில் பார்த்த உருவங்களை காணீர்............



எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய்

கடந்த நூற்றாண்டின் காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட காணவில்லை உன் பெயரை.
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட தாவணியே...

கிராமபுறங்களில் விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும் தொலைந்து போய்விட்டாயே?

வயல்வெளிகளையும்,உன்னையும் இனிவரும்
தலைமுறை இன்டர்நெட்டில்தான் காணமுடியும்.

சுடிதார்,மிடி,ஜீன்ஸ் என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும் எடுத்துவிட்டது நைட்டி.

இன்று கொஞ்சமாவது
தன் படங்களில் உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...

காதில் நுழைந்த பூச்சி



காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

தங்க நகை வாங்கும் போது கே.டி.எம் முத்திரை பார்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

தங்க நகை வாங்கும் போது கே.டி.எம் முத்திரை பார்ப்பது அவசியமா?
#########################################################‪#‎ 

                      தங்க‬ நகை வாங்கும்போது தரமான தங்கமா என்று பார்த்து நாம் வாங்குவோம். 916 ஹால் மார்க் முத்திரை என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு நகையை வாங்குவோம். அதே கே.டி.எம். முத்திரை இருந்தால் அது சுத்தத் தங்கம் என்று நினைத்து, வாங்கித்தள்ளுகிறார்கள் நம் மக்கள். ஆனால், கே.டி.எம். என்பது தங்க நகைகளின் தரத்தைக் குறிப்பதல்ல என்கிறார் பதிவுபெற்ற நகை மதிப்பீட்டாளர் கே.சுவாமிநாதன்.
'பொடி’ பயன்பாடு!
தங்க ஆபரணங்கள் செய்கிறபோது இரு பாகங்களை இணைக்க இணைப்பான்கள் (Soldering) பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த இணைப்பான்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய மூன்றும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து செய்யப்பட்ட கலப்பு உலோகமாகும். இதற்கு 'பொடி’ என்று வழக்குச் சொல் உண்டு.
இந்த 'பொடி’ பயன்படுத்திச் செய்யும் நகையின் தரத்திற்கேற்ப விகிதாசாரங்கள் மாறுபடும். இந்த 'பொடி’யை ஆபரணத்தில் இணைக்கும்போது இணைப்பை ஏற்படுத்திவிட்டு (வெல்டிங் போல) இதுவும் ஆபரணத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், இந்த 'பொடி’யால் செய்த நகையை மறுபடியும் உருக்கும்போது அதன் தரம் குறையும். ஏனென்றால் நகையில் இருக்கக்கூடிய 'பொடி’-யும் (தங்கம், வெள்ளி, செம்பு) சேர்ந்து உருகுவதால் நகையின் தரம் குறையும். இந்த பொடியை பயன்படுத்திச் செய்யப்பட்ட தங்க நகை ஆபரணங்களில் 22 கேரட் / 20 கேரட் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, 22 கேரட் நகையை உருக்கினால் 20 கேரட்டாக தரம் குறையும் என்பதுதான் இதன் அர்த்தம்.
கேட்மியம்!
இந்த பிரச்னையைப் போக்க சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு 'கேட்மியம்’ என்ற வெள்ளை நிறத்திலான உலோகத்தைப் 'பொடி’யாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதன் விலை ஒரு கிராமிற்கு பத்து ரூபாய். கேட்மியம் என்பதன் சுருக்கம்தான் கே.டி.எம். பொடியில் எப்படி தங்கம், வெள்ளி, செம்பு கலந்த கலவையை இணைப்பானாக பயன்படுத்துகிறார்களோ, அதுபோல தங்கம், கேட்மியம் இரண்டையும் கலந்து உலோகமாக்கி இணைப்பானாக ஆபரணத்தின் இணைப்பு பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த இணைப்பின்போது கேட்மியம் ஆபரணத்தை இணைத்துவிட்டு ஆவியாகிவிடும். ஆகவே, கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களை உருக்கும்போது தரம் குறையாது. காரணம், தங்கத்தைத் தவிர வேறு எந்த உலோகமும் அந்த நகையில் இருக்காது. ஆகவேதான், கே.டி.எம். ஆபரணங்களுக்கு சேதாரம் அதிகமாக இருக்காது.
தரமல்ல!
தற்போது 'ஹால்மார்க்’ முத்திரை நகைகள் வந்துள்ளது. மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த முத்திரையை அளிக்கிறது. கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களுக்கு 'ஹால்மார்க்’ முத்திரை தருவது கிடையாது. சில மிகப் பெரிய நிறுவனங்கள் '916 கே.டி.எம். ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகள் கிடைக்கும்’ என்று விளம்பரம் செய்கின்றன. இது மிகவும் தவறானது. கே.டி.எம். இணைப்பு இருந்தாலே 'ஹால்மார்க்’ முத்திரை அளிக்கும் நிறுவனங்கள் முத்திரை தராமல் நிராகரித்துவிடும். ஹால்மார்க் நகை வாங்கும்போது எவ்வளவு சிறிய நகையாக இருந்தாலும் ஐந்து விதமான லேசர் முத்திரை குறித்திருப்பார்கள்.
தடா உலோகம்!
ஆபரணத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இந்த கேட்மியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆபரணத்தைச் செய்யும்போது கேட்மியம் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது. காரணம், ஆபரண இணைப்பில் கேட்மியம் இணைப்பிற்கு 'ஊக்கியாக’ செயல்பட்டு, ஆவியாகும்போது அது நகை செய்பவரின் சுவாசம் மூலம் உடலுக்குள் சென்று கேன்சர் நோய் வந்துவிடும். ஆனால், தடை செய்யப்பட்ட கேட்மியம் உலோகத்தை இன்று வரை இந்தியாவில் நகைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.''
'அப்படியானால் கே.டி.எம். நகையை அணிந்தால் ஆபத்தா?’ என்று அவரிடம் கேட்டோம். ''கிடையவே கிடையாது. ஏனெனில் நகை செய்யும்போது கேட்மியம் ஆவியாகி போய்விடுகிறது. இதனால் கே.டி.எம். நகை அணிபவருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. தற்போது துத்தநாகம் (ஞீமிழிசி) இணைப்பானால் இணைக்கப்பட்ட ஆபரணங்கள் விற்பனைக்கு வருகிறது. இதற்கான 'முத்திரை'க்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, நகையில் உள்ள எந்த முத்திரையையும் நம்பாமல் கடைக்காரரின் நம்பிக்கையைப் பொறுத்து நகையை வாங்கலாம்'' என்று முடித்தார் சுவாமிநாதன்.
தங்க நகை பற்றி எவ்வளவு விழிப்போடு இருக்கிறோமோ, அந்தளவுக்கு ஏமாறாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.
நன்றி: ஈகரை. www.sindinga.com

காவல்துறை குறியீடுகள்


                        தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.
 
இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  
 
 
Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]
 
Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia


தகவல் உரிமைசட்டம்.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எப்படி பயன்பெற்றது? இதனை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மக்கள் படும் இன்னல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.
மேலும் எந்த பிரச்சனைகளுக்கு எந்த அரசு அதிகாரிகளை அணுகுவது, எப்படி தகல்வல்கள் பெறுவது என்பது பற்றி இங்கு விவரிக்கபடும்.
இங்கு கிராம சம்பந்தமாக சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அவற்றின் முடிவுகள் என்ன என்பது பற்றியும் அறியலாம்.
தகவல் பெறும் உரிமை - இந்தியா முன்னற்ற நுழைவாயிலில்

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.
அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?
- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.
யார் இந்த தகவல்களைத் தருவது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.
ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையதளங்கள்:
http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.
தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய தளம் http://www.tn.gov.in/rti/
தகவல் அறியும் உரிமை பற்றி மத்திய அரசின் இணையத்தளம்
http://rti.gov.in/
தகவல் அறியும் உரிமை
http://www.keetru.com/puthiyathendral/jul07/jayakumar.php
ஐந்தாம் தூண்
http://india.5thpillar.org/
மேலும் தகவல் உரிமை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
http://persmin.nic.in/RTI/WelcomeRTI.htm
முறையாக தகவல் கேட்பது எப்படி?
http://www.rtiindia.org/
நடைமுறை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள
http://www.makkal-sattam.org/
கிராம மற்றும் பஞ்சாயத்து நிர்வகாம் பற்றி அரசாங்கத்தின் கோப்பு
http://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf நன்றி : ஆசிரியர் குரல்

புற்று நோயை முற்றிலும் அழிக்க



மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
வெறும் நூறு ரூபாயில் (Rs.100)
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,
சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த
புற்று நோய்க்கு உண்டு.

இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில
மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த
நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள்
மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம்
உயிரை விட்டு விடுவதே மேல்
என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில்
மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும்,
உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின்
வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக
முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்
பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய
Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக
கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட
உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில்
பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக
கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும்
பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள
முட்களை நீக்கி கொள்ள
வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்
கொள்ளவேண்டும் அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன்
சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.

இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும்
மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .

ஒவ்வொரு முறை பயன்படுத்தும்
போதும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய
கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய்
நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .

சிலருக்கு மிக
குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக
வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.

யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக
இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள
ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..

கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான
அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப்
போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை ,
இதுக்கு மேலே தொடுவீங்க !?