வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014



தமிழ்நாடு வீட்டு வாடகை, குத்தகை, கட்டுபாட்டுச் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் !
இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை, இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும் குடும்பத்தினரிடம் வசூலித்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் வாடகைக்கு வீடு பிடிப்பதென்பது குதிரைக்கொம்பான செயலாகும். சென்னையில் வாடகை வீடுகளின் வாடகைப் பணத்தை உயர்த்திய பெருமை தொழில் நுட்பத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்களையே சாரும். இது ஒரு புறம் இருக்க வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தரும் தரகர்களின் கொடுமை அதற்கு மேல். ஒரு வீடு வாடகைக்கு இவர்கள் எடுத்துக் கொடுத்தால், நம் அந்த வீட்டுக்குக் கொடுக்கும் ஒருமாத வாடகையை இவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தரகர்களின் எழுதப்படாத சட்டம். ஆதலால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய காரணத்தால், தற்போது வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதின் காரணத்தினாலேயே இக்கட்டுரை எழுதுகிறேன்.
வீட்டு வாடகைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் :
• குடித்தனக்காரர்களின் உரிமைகள்
• வீட்டுக்காரர்களின் கடமைகள்
• குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்
• நியாய வாடகை
• வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்
• காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்
• வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்.
மேற்குறிப்பிட்ட கூறுகளை விளக்கி இதன்மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரர்களின் உறவை மேம்படுத்துவோம். குறிப்பாக “வீட்டு உரிமையாளர்”, “குடித்தனக்காரர்”, ”குடியிருப்பு பகுதி”, ”கட்டிடப்பகுதி” இதுபோன்ற சொற்களுக்கு சட்டவிளக்கத்தை உள்ளடக்கி புரிந்துகொள்ள வேண்டும்.
வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரருக்கு இடையிலான வாடகை ஒப்பந்தம் :
வீட்டை வாடகை அல்லது குத்தகைக்கு விடும் வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரருடன் முறையான வாடகை ஒப்பந்தத்தை ஆவணமாக செய்துகொள்வது முறையானதாக இருக்கும். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தவிதிகளை எழுதிகொள்வதின் மூலம் இருவரும் வரையரைக்குட்பட்டு கட்டுப்பட்டு இருக்க அது உதவும்.
குடித்தனக்காரர்களின் உரிமைகள் :
குடித்தனக்காரர் வாடகை ஒப்பந்தத்தில் என்ன வாடகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைக் கொடுத்தாலே போதுமானது. மேலும் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கூறுவாறேயானால் அவர் அதை மூன்று மாதத்திற்க்கு முன்னரே தக்கக் காரணத்தோடு தெரியப்படுத்தவேண்டும். ஒப்பந்த காலகட்டத்திற்க்குள் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால் ஒப்பந்த காலம் வரை குடியிருக்க இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமையிருக்கிறது. அதேபோல் வணிகக் கட்டிடமாக இருப்பின் தொழில் செய்பவர் வாடகைதாரராக இருந்தால் அவர் இறந்த பின் அவருடைய பங்குதாரர் இருப்பின் அவர் குடியிருக்க உரிமை உள்ளது. தக்கக்காரணமின்றி குடித்தனக்காரர் அனுபவித்துவரும் அடிப்படை வசதிகள் எதனையும் தடுத்து நிறுத்தவோ அல்லது நீக்கவோ உரிமையாளர் செய்யக்கூடாது.
வீட்டுக்காரர்களின் கடமைகள் :
வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரிடம் வாங்கும் மாதவாடகைக்கு பற்றுச்சீட்டு கொடுக்கவேண்டும். மேலும் வீட்டு வரிச் சுமைகளை குடித்தனக்காரர்களின் மீது செலுத்தக்கூடாது.
வாடகை ஒப்பந்தத்தின் காலம் வரை அதற்கான வாடகை மாற்றப்படக்கூடாது காலி செய்ய கூறும் போது தக்க மூன்று மாத முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
வாடகைக் கட்டுப்பாட்டு சட்டக் கூறுகளைத்தாண்டி வேறுவிதமாக வெளியேற்றக்கூடாது.
குடித்தனக்காரர்களின் பொறுப்புகள் :
குடித்தனக்காரர் எந்தவித தேவைக்காக குடித்தனம் வந்தாரோ அந்தத்தேவைக்காக மட்டுமே அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தவேண்டும்.
குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து பூட்டிவைக்கக் கூடாது. மேலும் வேறு யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது. காலிசெய்வதற்கு முன் முறையான முன் அறிவிப்பு அறிவிக்கவேண்டும்.
நியாய வாடகை :
1).இதன் கீழ் வரும் கிளைப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு கட்டிடத்தின் குடித்தனக்காரர் அல்லது வீட்டுக்காரர் அதற்கென மனுச் செய்து கொண்டால், தாம் தக்கதெனக்கருதும் ஒரு பரிசீலனையை நடத்திய பிறகு அத்தகைய கட்டிடத்துக்கு உரிய நியாய வாடகையினைக் கட்டுப்பாட்டாளர் நிர்ணயிக்கலாம்.
2).குடியிருப்பதற்காகவுள்ள ஒரு கட்டிடத்தின் அடக்க விலையில் ஒன்பது சதவீதந்தான் அதனுடைய நியாய வாடகையாக இருக்க வேண்டும்.
3).குடியிருப்பில்லாத ஒரு கட்டிடத்திற்குரிய நியாய வாடகை, அந்தக் கட்டிடத்தின் அடக்க விலையில் பன்னிரண்டு சதவீதமாக இருக்க வேண்டும்.
குறிப்பு :
ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதனதன் தரத்துக்கும், பரப்பளவுக்கும், விலைமதிப்புக்கும், அதில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளுக்கும் ஏற்ப, அதற்குரிய நியாய வாடகையைக் கேட்கும் உரிமை குடித்தனக்காரருக்கு மட்டுமின்றி வீட்டுக்காரருக்கும் இருக்கிறது.
வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்:
குடித்தனக்காரர் அந்தக் கட்டிடத்துக்குரிய வாடகையை, வீட்டுக்காரருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய நாளுக்குப் பதினைந்து நாட்கள் சென்ற பிறகும் அல்லது அத்தகைய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டிராதபோது, ஒரு மாதத்தின் வாடகையை அடுத்த மாதக் கடைசி வரையில் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முன் வரவில்லையென்றால் அல்லது,
1). அந்தக் குடித்தனக்காரர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டுக்காரரின் எழுத்து மூலமான அனுமதியின்றி,
அ).தமக்குள்ள குத்தகை உரிமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் அல்லது அத்தகைய உரிமை தமக்கு வழங்கப்படாதிருக்கும்போது அந்தக் கட்டிடம் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்கிறார். அல்லது,
ஆ).அவ்வீடு எத்தகைய உபயோகத்துக்காக வாடகைக்கு விடப்பட்டதோ, அதற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது,
2). அத்தகைய கட்டிடத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதனைப் பாழ்படுத்தியிருக்கிறார் அல்லது பாழ்படுத்தப்படும்படி விட்டிருக்கிறார். அல்லது
3). ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்துக்காக அமலில் உள்ள எந்தச் சட்டப்படியாவது அந்தக் குடித்தனக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது,
4).அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இருப்பவர்களுக்கும் அல்லது அந்தக் கட்டிடத்தின் வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும் தொல்லை தரக்கூடிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் பொறுப்பாகிறார். அல்லது,
5).ஒரு மலை வாசஸ்தலம் அல்லாத இடத்தில் அந்தக்கட்டிடம் இருந்தால், அதில் தக்கக் காரணமின்றி, நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் குடியிருக்கவில்லை.
6).வீட்டுக்காரருக்கு அந்தவீட்டில் உள்ள உரிமையை மறுத்தும் தமக்கு அந்தவீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு உரிமை உண்டென்று கோரும் குடித்தனக்காரரின் மறுப்பும் கோரிக்கையும் நியாயமற்றவை.
என்பதைப் பற்றிக் கட்டுப்பாட்டாளருக்குத் தெளிவு ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பை (கட்டிடத்தை) வீட்டுக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம், அப்படி இல்லையெனில் அந்த விண்ணப்பத்தைத் தள்ளிவிடலாம்.
காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள் :
மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடித்தனக்காரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. காரணமின்றி வீட்டு உரிமையாளர் காலி செய்யுமாறு மிரட்டினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிரந்தர உறுத்துக்கட்டளை வழக்கை(SUIT FOR PERMANENT INJUNCTION) தாக்கல் செய்து வாடகை நீதிமன்ற ஆணையின்றி தன்னைக் காலிசெய்யவைக்க முடியாது என்று வழக்காடலாம்.
வாடகையை கொடுக்கும் மற்றும் பெறும் முறை :
வீட்டுக்காரர் வாடகைக்குரிய ரசீதை பணம் பெறும்போது அளிக்கவேண்டும். வீட்டுக்காரர் வாடகையை காரணமின்றி பெற மறுத்தால் வாடகைதாரர் 10 நாட்கள் நேரம் கொடுத்து வங்கி கணக்கு எண் மற்றும் பெயர் கேட்டு ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வங்கியின் எண்ணை கொடுத்தால் ஒவ்வொரு மாத வாடகையையும் அந்த வங்கியில் செலுத்தவேண்டும். வங்கி எண்ணை வீட்டுக்காரர் தரமறுத்தால் மாத வாடகையை பணவிடைத்தாள் (MONEY ORDER) மூலம் செலவை கழித்துக்கொண்டு அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட தொகையை வீட்டுக்காரர் பெற மறுத்துவிட்டால் ஒவ்வொரு மாத வாடகையையும் வாடகைதாரர் வாடகை நீதிமன்றத்தில் செலுத்தி வரவேண்டும்.வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகளை வழக்குரைஞர்களை அணுகித் தெரிந்துக்கொண்டு அவர்களுடைய உதவியுடன் வழக்கை தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ளலாம்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பாவாடை தாவணி!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். பாவாடை தாவணியில் பார்த்த உருவங்களை காணீர்............



எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய்

கடந்த நூற்றாண்டின் காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட காணவில்லை உன் பெயரை.
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட தாவணியே...

கிராமபுறங்களில் விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும் தொலைந்து போய்விட்டாயே?

வயல்வெளிகளையும்,உன்னையும் இனிவரும்
தலைமுறை இன்டர்நெட்டில்தான் காணமுடியும்.

சுடிதார்,மிடி,ஜீன்ஸ் என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும் எடுத்துவிட்டது நைட்டி.

இன்று கொஞ்சமாவது
தன் படங்களில் உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...

காதில் நுழைந்த பூச்சி



காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

தங்க நகை வாங்கும் போது கே.டி.எம் முத்திரை பார்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

தங்க நகை வாங்கும் போது கே.டி.எம் முத்திரை பார்ப்பது அவசியமா?
#########################################################‪#‎ 

                      தங்க‬ நகை வாங்கும்போது தரமான தங்கமா என்று பார்த்து நாம் வாங்குவோம். 916 ஹால் மார்க் முத்திரை என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு நகையை வாங்குவோம். அதே கே.டி.எம். முத்திரை இருந்தால் அது சுத்தத் தங்கம் என்று நினைத்து, வாங்கித்தள்ளுகிறார்கள் நம் மக்கள். ஆனால், கே.டி.எம். என்பது தங்க நகைகளின் தரத்தைக் குறிப்பதல்ல என்கிறார் பதிவுபெற்ற நகை மதிப்பீட்டாளர் கே.சுவாமிநாதன்.
'பொடி’ பயன்பாடு!
தங்க ஆபரணங்கள் செய்கிறபோது இரு பாகங்களை இணைக்க இணைப்பான்கள் (Soldering) பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த இணைப்பான்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய மூன்றும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து செய்யப்பட்ட கலப்பு உலோகமாகும். இதற்கு 'பொடி’ என்று வழக்குச் சொல் உண்டு.
இந்த 'பொடி’ பயன்படுத்திச் செய்யும் நகையின் தரத்திற்கேற்ப விகிதாசாரங்கள் மாறுபடும். இந்த 'பொடி’யை ஆபரணத்தில் இணைக்கும்போது இணைப்பை ஏற்படுத்திவிட்டு (வெல்டிங் போல) இதுவும் ஆபரணத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், இந்த 'பொடி’யால் செய்த நகையை மறுபடியும் உருக்கும்போது அதன் தரம் குறையும். ஏனென்றால் நகையில் இருக்கக்கூடிய 'பொடி’-யும் (தங்கம், வெள்ளி, செம்பு) சேர்ந்து உருகுவதால் நகையின் தரம் குறையும். இந்த பொடியை பயன்படுத்திச் செய்யப்பட்ட தங்க நகை ஆபரணங்களில் 22 கேரட் / 20 கேரட் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, 22 கேரட் நகையை உருக்கினால் 20 கேரட்டாக தரம் குறையும் என்பதுதான் இதன் அர்த்தம்.
கேட்மியம்!
இந்த பிரச்னையைப் போக்க சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு 'கேட்மியம்’ என்ற வெள்ளை நிறத்திலான உலோகத்தைப் 'பொடி’யாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதன் விலை ஒரு கிராமிற்கு பத்து ரூபாய். கேட்மியம் என்பதன் சுருக்கம்தான் கே.டி.எம். பொடியில் எப்படி தங்கம், வெள்ளி, செம்பு கலந்த கலவையை இணைப்பானாக பயன்படுத்துகிறார்களோ, அதுபோல தங்கம், கேட்மியம் இரண்டையும் கலந்து உலோகமாக்கி இணைப்பானாக ஆபரணத்தின் இணைப்பு பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த இணைப்பின்போது கேட்மியம் ஆபரணத்தை இணைத்துவிட்டு ஆவியாகிவிடும். ஆகவே, கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களை உருக்கும்போது தரம் குறையாது. காரணம், தங்கத்தைத் தவிர வேறு எந்த உலோகமும் அந்த நகையில் இருக்காது. ஆகவேதான், கே.டி.எம். ஆபரணங்களுக்கு சேதாரம் அதிகமாக இருக்காது.
தரமல்ல!
தற்போது 'ஹால்மார்க்’ முத்திரை நகைகள் வந்துள்ளது. மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த முத்திரையை அளிக்கிறது. கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களுக்கு 'ஹால்மார்க்’ முத்திரை தருவது கிடையாது. சில மிகப் பெரிய நிறுவனங்கள் '916 கே.டி.எம். ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகள் கிடைக்கும்’ என்று விளம்பரம் செய்கின்றன. இது மிகவும் தவறானது. கே.டி.எம். இணைப்பு இருந்தாலே 'ஹால்மார்க்’ முத்திரை அளிக்கும் நிறுவனங்கள் முத்திரை தராமல் நிராகரித்துவிடும். ஹால்மார்க் நகை வாங்கும்போது எவ்வளவு சிறிய நகையாக இருந்தாலும் ஐந்து விதமான லேசர் முத்திரை குறித்திருப்பார்கள்.
தடா உலோகம்!
ஆபரணத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இந்த கேட்மியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆபரணத்தைச் செய்யும்போது கேட்மியம் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது. காரணம், ஆபரண இணைப்பில் கேட்மியம் இணைப்பிற்கு 'ஊக்கியாக’ செயல்பட்டு, ஆவியாகும்போது அது நகை செய்பவரின் சுவாசம் மூலம் உடலுக்குள் சென்று கேன்சர் நோய் வந்துவிடும். ஆனால், தடை செய்யப்பட்ட கேட்மியம் உலோகத்தை இன்று வரை இந்தியாவில் நகைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.''
'அப்படியானால் கே.டி.எம். நகையை அணிந்தால் ஆபத்தா?’ என்று அவரிடம் கேட்டோம். ''கிடையவே கிடையாது. ஏனெனில் நகை செய்யும்போது கேட்மியம் ஆவியாகி போய்விடுகிறது. இதனால் கே.டி.எம். நகை அணிபவருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. தற்போது துத்தநாகம் (ஞீமிழிசி) இணைப்பானால் இணைக்கப்பட்ட ஆபரணங்கள் விற்பனைக்கு வருகிறது. இதற்கான 'முத்திரை'க்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, நகையில் உள்ள எந்த முத்திரையையும் நம்பாமல் கடைக்காரரின் நம்பிக்கையைப் பொறுத்து நகையை வாங்கலாம்'' என்று முடித்தார் சுவாமிநாதன்.
தங்க நகை பற்றி எவ்வளவு விழிப்போடு இருக்கிறோமோ, அந்தளவுக்கு ஏமாறாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.
நன்றி: ஈகரை. www.sindinga.com

காவல்துறை குறியீடுகள்


                        தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.
 
இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  
 
 
Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]
 
Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia


தகவல் உரிமைசட்டம்.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எப்படி பயன்பெற்றது? இதனை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மக்கள் படும் இன்னல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.
மேலும் எந்த பிரச்சனைகளுக்கு எந்த அரசு அதிகாரிகளை அணுகுவது, எப்படி தகல்வல்கள் பெறுவது என்பது பற்றி இங்கு விவரிக்கபடும்.
இங்கு கிராம சம்பந்தமாக சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அவற்றின் முடிவுகள் என்ன என்பது பற்றியும் அறியலாம்.
தகவல் பெறும் உரிமை - இந்தியா முன்னற்ற நுழைவாயிலில்

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.
அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?
- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.
யார் இந்த தகவல்களைத் தருவது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.
ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையதளங்கள்:
http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.
தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய தளம் http://www.tn.gov.in/rti/
தகவல் அறியும் உரிமை பற்றி மத்திய அரசின் இணையத்தளம்
http://rti.gov.in/
தகவல் அறியும் உரிமை
http://www.keetru.com/puthiyathendral/jul07/jayakumar.php
ஐந்தாம் தூண்
http://india.5thpillar.org/
மேலும் தகவல் உரிமை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
http://persmin.nic.in/RTI/WelcomeRTI.htm
முறையாக தகவல் கேட்பது எப்படி?
http://www.rtiindia.org/
நடைமுறை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள
http://www.makkal-sattam.org/
கிராம மற்றும் பஞ்சாயத்து நிர்வகாம் பற்றி அரசாங்கத்தின் கோப்பு
http://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf நன்றி : ஆசிரியர் குரல்

புற்று நோயை முற்றிலும் அழிக்க



மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
வெறும் நூறு ரூபாயில் (Rs.100)
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,
சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த
புற்று நோய்க்கு உண்டு.

இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில
மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த
நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள்
மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம்
உயிரை விட்டு விடுவதே மேல்
என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில்
மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும்,
உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின்
வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக
முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்
பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய
Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக
கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட
உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில்
பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக
கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும்
பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள
முட்களை நீக்கி கொள்ள
வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்
கொள்ளவேண்டும் அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன்
சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.

இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும்
மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .

ஒவ்வொரு முறை பயன்படுத்தும்
போதும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய
கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய்
நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .

சிலருக்கு மிக
குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக
வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.

யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக
இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள
ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..

கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான
அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப்
போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை ,
இதுக்கு மேலே தொடுவீங்க !?

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வரலாற்று சிறப்புமிக்க சத்தியமங்கலம் காவல் நிலையம் .
இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ,மொத்த பரப்பளவு 87 சென்ட், கட்டப்பட்ட ஆண்டு 1905, காவல்நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1907, தற்பொழுது காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் 56 பேர் , ஆய்வாளர் முத்துசாமி மற்றும் உதவி ஆய்வாளர்கள் 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உதவி ஆய்வாளர்கள் உள்ளனர் , தலைமை காவலாளர்கள் 22 பேர், காவலாளர்கள் 20 பேர் ,
தொலைபேசி எண் : 04295 - 220228


மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்றுதான் இன்றும் பாடிக்கொண்டிருந்திருக்கும் வார்க்கத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் இன்றும் நிறைந்திருக்கும். பழக்காலத்திலிருந்தே தொடர்ந்துவந்த பெண் சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளும் குற்றங்களும் சில புரட்சிக்குரல்களால் களையப்பட்டாலும் காலத்திற்கு ஏற்றபடியான புதிதுபுதிதான அநீதிகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. தேவதாசி முறையும், உடன்கட்டை முறையும் தீர்ந்ததென பெருமூச்சு விட்ட மறுபொழுதே வரதட்சணைக் கொடுமை முதலாக பெண் சிசுக்கொலை மற்றும் ஈவ்டீசிங் எனப்படும் பெண்கள் மீதான கேலிப்பிரச்சினை ஈறாக எத்தனை புதிய பிரச்சினைகள்.
பெண்ணை கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான புதிய சாதனை. நாகரிக வளர்ச்சியில் இந்த கொடுமைகள் இன்று கொஞ்சம் மறைவது போல் தோன்றினாலும் காலத்திற்கு ஏற்றபடி பெண்ணினத்தின் மீதான புதிய பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்பொழுதுமே இந்தெ பெண்குலத்தின் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் வேரறுக்கப்படுவதில்லை. காலத்திற்கேற்ப புதியதாய் அவதாரம் எடுக்கின்றன.
பொதுவாகவே இந்த சமூகம் 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும். எனக்கென்னவோ இந்த வாக்கியம் கேட்கும் பொழுதெல்லாம் பெண்ணின் வெற்றியை ஆண்கள் தட்டிப்பறித்து பெருமைப்பட்டுக்கொள்வதாக தோன்றும். அதென்ன வெற்றிக்கு பின்னால்?, அதாவது, வெற்றி ஆணுக்குத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சொந்தக்காரி அந்த ஆணுக்குப் பின் நிற்க வேண்டும் என்பதா அதன் உட்கருத்து? வேண்டுமென்றால் பெண்ணையும் சமமாய் பாவித்து ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருந்து பார்க்கட்டுமே. என்னே இந்த சமுதாயத்தின் சாதுர்யம்! இப்பொழுது நீங்கள் கூட இந்த சமுதாயத்தின் சாதுர்யம் கண்டு வியக்கலாம். ஆச்சரியபடுவதற்கில்லை.
இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும் முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு பெண் வேண்டும்.
ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும் இருந்துவிடகூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?
உங்களில் யாரேனும் சொல்லக்கூடும், பெண்கள்தான் இன்று அனைத்து துறைகளிலுமே கால் பதித்து விட்டார்களே. பெண்ணுரிமை கிடைத்தாயிற்றே என. நான் இல்லையென்றும் சொல்லவில்லை.
ஆனால் நாடே இமாலய உயரம் ஏறவேண்டியிருக்கவேண்டிய பட்சத்தில் அவர்கள் ஏறியிருப்பது முதல் சில படிகளே என்றுதான் சொல்கிறேன். இன்றுவரை ஒரு இந்திராகாந்தி, ஒரு கல்பனா சாவ்லா என ஒருசிலர் தானே கண்களுக்கு தென்படுகிறார்கள்.
இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம் கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர் ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது.
அப்படியே கணவர் வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டை வீட்டிலே உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?
இன்றைய சமுதாயத்தின் பெண்ணினமே! ஒவ்வொரு முறையும் உங்களுக்கு குரல்கொடுக்க ஏன் மற்றவர்களைத் தேடுகிறீர்கள். ஆமைபோல் ஆண்களின் அதிகார ஓட்டுக்குள் இன்னும் எத்தனை காலம் அடங்கியே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் அடங்கியே இருப்பதால்தான் இந்த சமுதாயமும் உங்களை நகர அனுமதிக்காத பொழுதுகளில் எல்லாம் எளிதாக கழித்துப்போட்டுவிடுகிறது.
உலகின் இன்னும் படிக்கப்படாத பக்கங்கள் எத்தனையோ இருக்க, இன்னும் அழும் தொடர்கள் தானே உங்கள் ''மாலை''களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன.
உலகின் அனைத்திலுமே உங்களுக்கும் சம உரிமை உண்டெனெ முதலில் உணர்ந்திடுங்கள். வீடும் அலுவலகமும் தவிர உலகில் இருக்கும் அனைத்தையும் எப்பொழுது
கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? சுய ஒழுக்கத்துடனான யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும் பொறுப்பான தாய்மையை பெண்களுக்கு கொடுத்துள்ளது.
பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
பதிவு
- நவீன் கிருஷ்ணன்
( மனிதன் )
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்றுதான் இன்றும் பாடிக்கொண்டிருந்திருக்கும் வார்க்கத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் இன்றும் நிறைந்திருக்கும். பழக்காலத்திலிருந்தே தொடர்ந்துவந்த பெண் சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளும் குற்றங்களும் சில புரட்சிக்குரல்களால் களையப்பட்டாலும் காலத்திற்கு ஏற்றபடியான புதிதுபுதிதான அநீதிகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. தேவதாசி முறையும், உடன்கட்டை முறையும் தீர்ந்ததென பெருமூச்சு விட்ட மறுபொழுதே வரதட்சணைக் கொடுமை முதலாக பெண் சிசுக்கொலை மற்றும் ஈவ்டீசிங் எனப்படும் பெண்கள் மீதான கேலிப்பிரச்சினை ஈறாக எத்தனை புதிய பிரச்சினைகள்.
 
பெண்ணை கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான புதிய சாதனை. நாகரிக வளர்ச்சியில் இந்த கொடுமைகள் இன்று கொஞ்சம் மறைவது போல் தோன்றினாலும் காலத்திற்கு ஏற்றபடி பெண்ணினத்தின் மீதான புதிய பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்பொழுதுமே இந்தெ பெண்குலத்தின் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் வேரறுக்கப்படுவதில்லை. காலத்திற்கேற்ப புதியதாய் அவதாரம் எடுக்கின்றன.

பொதுவாகவே இந்த சமூகம் 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும். எனக்கென்னவோ இந்த வாக்கியம் கேட்கும் பொழுதெல்லாம் பெண்ணின் வெற்றியை ஆண்கள் தட்டிப்பறித்து பெருமைப்பட்டுக்கொள்வதாக தோன்றும். அதென்ன வெற்றிக்கு பின்னால்?, அதாவது, வெற்றி ஆணுக்குத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சொந்தக்காரி அந்த ஆணுக்குப் பின் நிற்க வேண்டும் என்பதா அதன் உட்கருத்து? வேண்டுமென்றால் பெண்ணையும் சமமாய் பாவித்து ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருந்து பார்க்கட்டுமே. என்னே இந்த சமுதாயத்தின் சாதுர்யம்! இப்பொழுது நீங்கள் கூட இந்த சமுதாயத்தின் சாதுர்யம் கண்டு வியக்கலாம். ஆச்சரியபடுவதற்கில்லை.

இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும் முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு பெண் வேண்டும். 

ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும் இருந்துவிடகூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?
உங்களில் யாரேனும் சொல்லக்கூடும், பெண்கள்தான் இன்று அனைத்து துறைகளிலுமே கால் பதித்து விட்டார்களே. பெண்ணுரிமை கிடைத்தாயிற்றே என. நான் இல்லையென்றும் சொல்லவில்லை. 

ஆனால் நாடே இமாலய உயரம் ஏறவேண்டியிருக்கவேண்டிய பட்சத்தில் அவர்கள் ஏறியிருப்பது முதல் சில படிகளே என்றுதான் சொல்கிறேன். இன்றுவரை ஒரு இந்திராகாந்தி, ஒரு கல்பனா சாவ்லா என ஒருசிலர் தானே கண்களுக்கு தென்படுகிறார்கள்.

இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம் கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர் ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது. 
அப்படியே கணவர் வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டை வீட்டிலே உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?

இன்றைய சமுதாயத்தின் பெண்ணினமே! ஒவ்வொரு முறையும் உங்களுக்கு குரல்கொடுக்க ஏன் மற்றவர்களைத் தேடுகிறீர்கள். ஆமைபோல் ஆண்களின் அதிகார ஓட்டுக்குள் இன்னும் எத்தனை காலம் அடங்கியே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் அடங்கியே இருப்பதால்தான் இந்த சமுதாயமும் உங்களை நகர அனுமதிக்காத பொழுதுகளில் எல்லாம் எளிதாக கழித்துப்போட்டுவிடுகிறது.
உலகின் இன்னும் படிக்கப்படாத பக்கங்கள் எத்தனையோ இருக்க, இன்னும் அழும் தொடர்கள் தானே உங்கள் ''மாலை''களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. 

உலகின் அனைத்திலுமே உங்களுக்கும் சம உரிமை உண்டெனெ முதலில் உணர்ந்திடுங்கள். வீடும் அலுவலகமும் தவிர உலகில் இருக்கும் அனைத்தையும் எப்பொழுது 
கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?

அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? சுய ஒழுக்கத்துடனான யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும் பொறுப்பான தாய்மையை பெண்களுக்கு கொடுத்துள்ளது.

பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!

பதிவு
- நவீன் கிருஷ்ணன்
( மனிதன் )



எதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் போக்கும் குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :
6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :
7. ஓம் நவநிதி பதயே நமோ நம :
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :
9. ஓம் நரபதி பதயே நமோ நம :
10. ஓம் சுரபதி பதயே நமோ நம :
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :
12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :
14. ஓம் தபராஜ பதயே நமோ நம :
15. ஓம் இகபர பதயே நமோ நம :
16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :
18. ஓம் நயநய பதயே நமோ நம :
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :
20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :
21. ஓம் வல்லீ பதயே நமோ நம :
22. ஓம் மல்ல பதயே நமோ நம :
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :
27. ஓம் அபேத பதயே நமோ நம :
28. ஓம் சுபோத பதயே நமோ நம :
29. ஓம் வியூஹ பதயே நமோ நம :
30. ஓம் மயூர பதயே நமோ நம :
31. ஓம் பூத பதயே நமோ நம :
32. ஓம் வேத பதயே நமோ நம :
33. ஓம் புராண பதயே நமோ நம :
34. ஓம் ப்ராண பதயே நமோ நம :
35. ஓம் பக்த பதயே நமோ நம :
36. ஓம் முக்த பதயே நமோ நம :
37. ஓம் அகார பதயே நமோ நம :
38. ஓம் உகார பதயே நமோ நம :
39. ஓம் மகார பதயே நமோ நம :
40. ஓம் விகாச பதயே நமோ நம :
41. ஓம் ஆதி பதயே நமோ நம :
42. ஓம் பூதி பதயே நமோ நம :
43. ஓம் அமார பதயே நமோ நம :
44. ஓம் குமார பதயே நமோ நம :
நீங்கள் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.
இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதாகும். இது கந்தபுராணத்தின் சுருக்கம் ஆகும். மொத்தம் 44 வரிகளை உடையது. இதனை படிக்கும் போது “நம :” என்ற சொல்லை ”நமஹ்” என்று உச்சரிக்கவும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும். இதைப் பற்றிய பாடல் ஒன்று இதோ.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகா வேன்றோது வார்முன்.

சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும். மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும். மனதில் “முருகா” என்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும் என்பதே இதன் பொருளாகும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்



#‎சிதம்பர‬ ‪#‎ரகசியம்‬ - நம் முன்னோர்களின் அதிசயம்#
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?
எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....
இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..
பல வற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...
அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

தூங்கும்போது தலை வைத்து படுக்கும் திசை?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 
எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.
வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது.
தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.
இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,
தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.
அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.
கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.
காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.
இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

பல்லவர்கள் ஈழத்தவர்களா ?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
       
Arun Kumar அவர்களுக்கு நன்றிங்க.

           பல்லவர்கள் ஈழத்தவர்களா ?திட்டம் இட்டு மறைக்கப்பட்ட பல்லவர்கள் வரலாற்றை வெளிக்கொண்டுவர ஒரு முயற்சி !
புத்தர் இலங்கைக்கு வந்த கி மு 6 ம் நூற்றாண்டு காலத்தில் ஈழத்தில் 3 கோடி நாகர்கள் இருந்தார்கள் என்று வரலாற்றில் வருகின்றது.அதன் பின்னர் கி மு 200/300 இல் ஈழத்தை தாக்கிய 4காவது மிக பெரிய கடல் அழிவு ஈழத்தின் வட பகுதியையும் வட மேற்கு பகுதியையுமே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது என கருதப்படுகின்றது. இந்த காலத்தில் கடல் அழிவில் தப்பி பிழைத்த மக்கள் தொண்டை மண்டலத்தில் சென்று வாழ்ந்தார்கள்.
இவர்கள் தொண்டை மண்டலத்துக்கு சென்று வாழ்ந்ததுக்கு ஒரு காரணம் இருக்கிறது.அந்த காலத்தில் அந்த பகுதியை ஆண்ட சோழ அரசன் கிள்ளி வளவன் (சிலர் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் சிலர் இவன் மகன் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் )ஈழத்து மணிபல்லவ நாக இளவரசி பீலியவளையை திருமணம் செய்து இருந்தான்.அவர்களுக்கு பிறந்த மகன் பிற்காலத்தின் தொண்டமான் இளம்திரையன் என அழைக்கபட்டவனும் இந்த கடல் அழிவில் குழந்தையாக தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தவன். இளமையில் (குழந்தையில்) திரையில்(அலையில்)அகப்பட்டு வந்ததால் காரண பெயர் இளம்திரையன்.எனவே அவனுடன் திரையில் பாதிக்க பட்டு வந்த மக்களும் தொண்டை மண்டலத்தில் வந்து வாழ்ந்தார்கள்.இவன் வந்த பின்னரே இந்த இடத்துக்கு தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.அதற்கு ஈழத்தின் தொண்டைமானாறு பற்றி குறிப்பிட்டும் கடல் அழிவால் இலங்கையின் தொண்டை போன்ற வடிவில் அமைந்த பகுதியில் இருந்து வந்தவன் என்பதாலும் தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.
ஒரு காலத்தில் இலங்கை பூராக மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்றும் யாழ் குடாநாடுதான் மணிபல்லவம் என்றும் அதில் ஒரு தீவு தான் மணி பல்லவம் என்றும் பல கருத்துக்கள் இருந்தாலும் மணிபல்லவம் என்பது ஈழம் சார்ந்தது என்பது உறுதி.
மணி பல்லவத்தில் இருந்து தொண்டை மண்டலத்துக்கு வந்தகாலத்தில் இவர்கள் சோழர்களுக்கு போர்களில் உதவியாக இருந்தார்கள்.அதனால் சோழராச்சியம் மிகவும் விரிவடைந்தது. சோழ ராச்சியம் விரிவடைந்து சில காலத்துக்கு பின் தொண்டை மண்டலத்துக்கு இளம்திரையன் அரசன் ஆனான். பின்னர் சோழர்களுக்கு வம்ச குழப்பம் ஏற்பட்டு சோழ ராச்சியம் இரண்டாக பிரிக்கபட்டு காஞ்சி புரத்திலும்,உறையூரிலும் இரு அரசாக இயங்க தொடங்கியது காலபோக்கில் இவர்கள் மோதி நிற்க ஈழத்தில் இருந்துவந்தவர்கள் இளம்திரையனுக்கு பின்னர் பல்லவர்களாக உருவெடுத்தார்கள்.
தமிழக மற்றும் ஆந்திர ஆய்வாளர்கள் பல்லவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்ற உண்மையை மறைக்க பல தரப்பட்ட பொய்களை கொண்டுவந்தார்கள்.சிலர் பல்லவர்கள் தமிழர்களே இல்லை என்ற கருத்தை கூட முன்வைத்தார்கள்.சிலர் பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூட பொய் சொன்னார்கள்.பக்கத்தில் இருந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்கள் தென்னிந்தியாவை அண்ணளவாக 700 வரிடம் ,(கி பி 225 /கி பி 912)சிற்ரரசாகவும்(225/575 தொண்டை மண்டலம் )(575/846 தென்னிந்தியா முழுவதும் பேரரசாகவும் பின்னர் 846 /912 சிற்ரரசாகவும் ஆண்டார்கள் என்பதை சொல்ல ஏற்றுகொள்ள மனம் இல்லை.அதனால் இன்றுவரை வரலாற்று குழப்பம் தொடர்கின்றது.
தென்னிந்தியா என்றால் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் தான் என்ற மூவேந்தர் மாயை 700 வரிடம் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவர்களான ஈழத்தமிழர்களை ஏற்றுகொள்ள மறுக்கின்றது.
பல்லவர்கள் ஒருபோதும் சோழர்களை ஏமாற்றி அரசை பறித்தவர்கள் அல்ல.உதவியவர்களுக்கு துரோகம் செய்தவர்களும் அல்ல. சோழர்கள் இரண்டு பட்டு நின்ற வேளையில் பாண்டியர்களும் அவர்களோடு மோதி நின்றார்கள். இவர்கள் தொண்டை மண்டலத்தில் சிற்றரசாக தனித்து செயற்பட தொடங்கியகாலம். அண்ணளவாக இளம்திரையனுக்கு 400 வருடங்களுக்கு பின்னர் ஆகும்.(இளம்திரையன் காலம் கி மு 225) (பல்லவர்கள் தனித்து செயற்பட தொடங்கியது கி பி 225 )அதுவரை இளம் திரையன் வம்சத்துக்கு உதவியாக இருந்து இருக்கின்றார்கள்.கி பி 225 அளவில் இந்திய வடக்கில் இருந்து வந்த களப்பிரர்கள் தமிழகத்தின் பகுதிகளை கைப்பற்ற சில பத்து ஆண்டுகளாக போராடி 250/300 அளவில் தொண்டை மண்டலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை கைப்பற்றினார்கள்.இவர்களுக்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களுக்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தும் போர் நடந்தது கி பி 575 இல் களப்பிரர்களை முழுமையாக அழித்து முழு தமிழகத்தையும் பல்லவர்கள் கைப்பற்றினார்கள்.
களப்பிரர்கள் ஆண்டகாலத்தை தமிழக வரலாற்றில் இருண்ட காலம் (கி பி 250/575)என்று அழைக்கின்றார்கள்.இந்த காலத்தில் தான் கடை சங்கம் முடிவுக்கு வந்தது.தமிழ் மொழி வளர்சி முழுமையாக தடைபட்டது. சைவ கோவில்கள் இடிக்கப்பட்டது.சைவ சமயத்தவர்கள் தாக்க பட்டார்கள்.காளாமுகர்கள், கபாலிகர்கள் என புதிய பல்வேறு சமயங்கள் உருவாகியது. மொத்தம் 72 சமயங்கள் என்று சில குறிப்புக்களில் வருகின்றது.இவர்களிடம் இருந்து தமிழகத்தை கி பி 575 இல் முழுமையாக மீட்டு தமிழக தமிழர்களின் வாழ்வை உறுதிப்படுத்தி கட்டிட கலைகள் சிற்ப கலைகள் ஓவிய கலைகள் என கலைகளை வளர்த்து, நாயன்மார்களை ஆதரித்து பக்தி இலக்கியங்களை தோற்றுவித்தவர்கள் பல்லவர்கள்.பல்லவர்களின் காலத்தில் தான் பல சக்தி இலக்கியங்களை இயற்றிய ஆதி சங்கரரும் வாழ்ந்தார்.(சங்கரர்காலம் கி பி 788/820) இவர் தமிழ் உலகிற்கு செய்தது மகத்துவமான சேவை சமய போட்டியால் நலிவுற்று சண்டை இட்டு கொண்டு இருந்த சமயங்களில் மாற்று கருத்து கொண்டவர்களை வாதத்தில் வென்று ஒத்துழைத்து நின்ற 6 சமயங்களை ஒன்றாக இணைத்து இந்துமதம் என்பதை தோற்றிவித்தார்.
எனவே தமிழக வரலாற்றில் பல்லவர்கள் வரலாறு ஒரு முக்கியமான வரலாறு அவர்கள் இல்லாது இருந்தால் இன்றைக்கு தமிழ் மொழியும் எமது கலைகளும் தலைகீழாக மாறி இருக்கும். தொடர்ந்தும் மூவேந்தர்கள் என்று சேர சோழ பாண்டியர்களை மட்டும் புகழ்ந்து கொண்டு இருக்காமல் அண்ணளவாக 700 ஆண்டுகள் தனித்தும் அதற்கு முதல் 400 ஆண்டுகளாக சோழர்களுடன் இணைந்து பல்லவர்கள் என்ற பெயரை பாவிக்காமல் சோழர்களுக்கு உதவியாக தென் இந்தியாவை ஆண்ட பல்லவர்களை வரலாற்றில் சிறப்பிக்க வேண்டும்.இவர்கள் கடல் அழிவால் தொண்டை மண்டலம் வந்த பின்னரே (கி மு 200/300)இன்று தமிழ் கூறும் நல்லுலகம் வைத்திருக்கும் அநேகமான நூல்கள் உருவாகின இதை யாரும் மறுக்க முடியாது.தொல்காப்பியம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி மகாபாரதம் ,இராமாயண இதிகாசம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி சங்க இலக்கியங்கள் அகநானூறு புறநானூறு தொடங்கி ஐம் பெரும் காப்பியங்கள் வரை அனைத்தும் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி எல்லாம் சிந்தித்து பார்த்தால் இவர்கள் வருகைக்கு பின்னரே ஏற்பட்டது.அதுவரை எழுத்துவடிவம் பெறாமல் செவிவழியாகவே சொல்லப்பட்டு வந்தது.எனவே இலக்கியங்கள் எழுத்துவடிவ தோற்றத்துக்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு மிகவும் இருந்து இருக்கிறது என்பது வெளிப்படை.
இதிகாசங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் மூல பிரதிகள் வட மொழியில் இருக்கின்றது என்பதால் இவற்றை எழுதியவர்கள் வடவர்கள் என்று கூறுகின்றார்கள். வட மொழியான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை சொந்த எழுத்துவடிவம் இல்லை.இது தெளிவான ஒன்று அவர்களிடமே சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.அவர்கள் எழுதும் எழுத்து வடிவம் நாகலோகத்து நாகர்கள் உருவாக்கிய நாகரி எழுத்துவடிவம் இந்த நாகரி எழுத்துவடிவத்தை கொண்டுதான் இதை கண்டு பிடித்த தமிழர்கள் (பண்டைய நாகர்கள் எந்த கலப்பும் இன்றி முழுமையாக தமிழர்கள்)பண்டைய காலத்தில் தமிழை எழுதினார்கள்.பின்னர் பிற்காலத்தில் இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துவடிவத்தை கண்டு பிடித்ததும் தமது மூதாதையர் கண்டு பிடித்த எழுத்து வடிவத்தை சமஸ்கிரிததுக்கு கடன் கொடுத்துவிட்டு ,இன்று வட மொழி என்று வேறு கூறுகின்றார்கள்.(ஒரு எழுத்துவடிவத்தை கொண்டு பல மொழிகளை எழுதலாம்.உதரணத்துக்கு நாகரி யை இப்ப தேவநாகரி என்று மாற்றி அந்த எழுத்துவடிவத்தை கொண்டு இந்தியாவிலேயே பல மொழிகளை எழுதுகின்றார்கள்.மேற்கு உலக நாடுகளில் ஆங்கில எழுத்தை கொண்டு பல நாட்டு மொழிகளை எழுதுகின்றார்கள்)
முதல் தோன்றிய இலக்கியங்கள் நாகரி எழுத்தில் அதில் தேர்சி பெற்று இருந்த நாகர்கள் வாழ்ந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்களின் உதவியோடு எழுதியதை பிற்கால சோழர்காலத்தில் (கி.பி 846 பின்) இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துக்களில் எழுதினார்கள். இந்த மொழி மாற்றம் செய்த பொழுதுதான் வரலாறுகள் வடவர்களுக்கு சார்பாக அனேகமாக மாற்றம் பெற்றது. இதற்கு காரணம் பிற்கால சோழர் காலத்தில் நாம் இன்று வடக்கில் இருந்து வந்தவர்கள் என்று பார்பனர்கள் என்று சொல்பவர்களை கோவில் பூசைக்களுக்கும் அரச காரியங்களுக்கும் அழைத்துவரும் முறை தொடங்கியது.அந்த காலத்தில் தான் தேவதாசிகள் முறையும் தொடங்கியது.இதற்கு முற்பட்ட காலங்களில் பிராமணர்கள்(பட்டர்கள் ) என்ற பெயரில் கோவில்களுக்கு பூசை செய்தவர்கள் பண்டைய தமிழர்களில் தோன்றியவர்கள் வடவர் கலப்பு இல்லாதவர்கள்.
வடக்கில் இருந்து வந்த பார்பனர்கள் அரசர்களை புகழ்ந்து பாடும் மரபை ஏற்படுத்தி புகழ்மாலைகளை பாடி அவர்களை வர்ணனைகளால் மூளை சலவை செய்து தாங்கள் நினைத்ததை வரலாறுகளில் எழுதினார்கள். இந்தவகையில் எழுதப்பட்டதே புராண இதிகாசமாக இன்று நாம் வாசிக்கும் புத்தகங்கள்.மூலநூல்களை தாங்கள் எடுத்து கொண்டு போனார்கள்.அதை தழுவி எழுதுகின்றோம் என்று எம்மவர்களை ஏமாற்றினார்கள். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தமிழர்களை அரக்கர்கள் குரங்குகள் என்று கூறியது இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.
பல்லவர்கள் ஈழத்தவர்களா ?திட்டம் இட்டு மறைக்கப்பட்ட பல்லவர்கள் வரலாற்றை வெளிக்கொண்டுவர ஒரு முயற்சி !

புத்தர் இலங்கைக்கு வந்த கி மு 6 ம் நூற்றாண்டு காலத்தில் ஈழத்தில் 3 கோடி நாகர்கள் இருந்தார்கள் என்று வரலாற்றில் வருகின்றது.அதன் பின்னர் கி மு 200/300 இல் ஈழத்தை தாக்கிய 4காவது மிக பெரிய கடல் அழிவு ஈழத்தின் வட பகுதியையும் வட மேற்கு பகுதியையுமே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது என கருதப்படுகின்றது. இந்த காலத்தில் கடல் அழிவில் தப்பி பிழைத்த மக்கள் தொண்டை மண்டலத்தில் சென்று வாழ்ந்தார்கள்.

இவர்கள் தொண்டை மண்டலத்துக்கு சென்று வாழ்ந்ததுக்கு ஒரு காரணம் இருக்கிறது.அந்த காலத்தில் அந்த பகுதியை ஆண்ட சோழ அரசன் கிள்ளி வளவன் (சிலர் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் சிலர் இவன் மகன் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் )ஈழத்து மணிபல்லவ நாக இளவரசி பீலியவளையை திருமணம் செய்து இருந்தான்.அவர்களுக்கு பிறந்த மகன் பிற்காலத்தின் தொண்டமான் இளம்திரையன் என அழைக்கபட்டவனும் இந்த கடல் அழிவில் குழந்தையாக தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தவன். இளமையில் (குழந்தையில்) திரையில்(அலையில்)அகப்பட்டு வந்ததால் காரண பெயர் இளம்திரையன்.எனவே அவனுடன் திரையில் பாதிக்க பட்டு வந்த மக்களும் தொண்டை மண்டலத்தில் வந்து வாழ்ந்தார்கள்.இவன் வந்த பின்னரே இந்த இடத்துக்கு தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.அதற்கு ஈழத்தின் தொண்டைமானாறு பற்றி குறிப்பிட்டும் கடல் அழிவால் இலங்கையின் தொண்டை போன்ற வடிவில் அமைந்த பகுதியில் இருந்து வந்தவன் என்பதாலும் தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.

ஒரு காலத்தில் இலங்கை பூராக மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்றும் யாழ் குடாநாடுதான் மணிபல்லவம் என்றும் அதில் ஒரு தீவு தான் மணி பல்லவம் என்றும் பல கருத்துக்கள் இருந்தாலும் மணிபல்லவம் என்பது ஈழம் சார்ந்தது என்பது உறுதி.

மணி பல்லவத்தில் இருந்து தொண்டை மண்டலத்துக்கு வந்தகாலத்தில் இவர்கள் சோழர்களுக்கு போர்களில் உதவியாக இருந்தார்கள்.அதனால் சோழராச்சியம் மிகவும் விரிவடைந்தது. சோழ ராச்சியம் விரிவடைந்து சில காலத்துக்கு பின் தொண்டை மண்டலத்துக்கு இளம்திரையன் அரசன் ஆனான். பின்னர் சோழர்களுக்கு வம்ச குழப்பம் ஏற்பட்டு சோழ ராச்சியம் இரண்டாக பிரிக்கபட்டு காஞ்சி புரத்திலும்,உறையூரிலும் இரு அரசாக இயங்க தொடங்கியது காலபோக்கில் இவர்கள் மோதி நிற்க ஈழத்தில் இருந்துவந்தவர்கள் இளம்திரையனுக்கு பின்னர் பல்லவர்களாக உருவெடுத்தார்கள்.

தமிழக மற்றும் ஆந்திர ஆய்வாளர்கள் பல்லவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்ற உண்மையை மறைக்க பல தரப்பட்ட பொய்களை கொண்டுவந்தார்கள்.சிலர் பல்லவர்கள் தமிழர்களே இல்லை என்ற கருத்தை கூட முன்வைத்தார்கள்.சிலர் பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூட பொய் சொன்னார்கள்.பக்கத்தில் இருந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்கள் தென்னிந்தியாவை அண்ணளவாக 700 வரிடம் ,(கி பி 225 /கி பி 912)சிற்ரரசாகவும்(225/575 தொண்டை மண்டலம் )(575/846 தென்னிந்தியா முழுவதும் பேரரசாகவும் பின்னர் 846 /912 சிற்ரரசாகவும் ஆண்டார்கள் என்பதை சொல்ல ஏற்றுகொள்ள மனம் இல்லை.அதனால் இன்றுவரை வரலாற்று குழப்பம் தொடர்கின்றது.

தென்னிந்தியா என்றால் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் தான் என்ற மூவேந்தர் மாயை 700 வரிடம் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவர்களான ஈழத்தமிழர்களை ஏற்றுகொள்ள மறுக்கின்றது. 

பல்லவர்கள் ஒருபோதும் சோழர்களை ஏமாற்றி அரசை பறித்தவர்கள் அல்ல.உதவியவர்களுக்கு துரோகம் செய்தவர்களும் அல்ல. சோழர்கள் இரண்டு பட்டு நின்ற வேளையில் பாண்டியர்களும் அவர்களோடு மோதி நின்றார்கள். இவர்கள் தொண்டை மண்டலத்தில் சிற்றரசாக தனித்து செயற்பட தொடங்கியகாலம். அண்ணளவாக இளம்திரையனுக்கு 400 வருடங்களுக்கு பின்னர் ஆகும்.(இளம்திரையன் காலம் கி மு 225) (பல்லவர்கள் தனித்து செயற்பட தொடங்கியது கி பி 225 )அதுவரை இளம் திரையன் வம்சத்துக்கு உதவியாக இருந்து இருக்கின்றார்கள்.கி பி 225 அளவில் இந்திய வடக்கில் இருந்து வந்த களப்பிரர்கள் தமிழகத்தின் பகுதிகளை கைப்பற்ற சில பத்து ஆண்டுகளாக போராடி 250/300 அளவில் தொண்டை மண்டலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை கைப்பற்றினார்கள்.இவர்களுக்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களுக்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தும் போர் நடந்தது கி பி 575 இல் களப்பிரர்களை முழுமையாக அழித்து முழு தமிழகத்தையும் பல்லவர்கள் கைப்பற்றினார்கள்.

களப்பிரர்கள் ஆண்டகாலத்தை தமிழக வரலாற்றில் இருண்ட காலம் (கி பி 250/575)என்று அழைக்கின்றார்கள்.இந்த காலத்தில் தான் கடை சங்கம் முடிவுக்கு வந்தது.தமிழ் மொழி வளர்சி முழுமையாக தடைபட்டது. சைவ கோவில்கள் இடிக்கப்பட்டது.சைவ சமயத்தவர்கள் தாக்க பட்டார்கள்.காளாமுகர்கள், கபாலிகர்கள் என புதிய பல்வேறு சமயங்கள் உருவாகியது. மொத்தம் 72 சமயங்கள் என்று சில குறிப்புக்களில் வருகின்றது.இவர்களிடம் இருந்து தமிழகத்தை கி பி 575 இல் முழுமையாக மீட்டு தமிழக தமிழர்களின் வாழ்வை உறுதிப்படுத்தி கட்டிட கலைகள் சிற்ப கலைகள் ஓவிய கலைகள் என கலைகளை வளர்த்து, நாயன்மார்களை ஆதரித்து பக்தி இலக்கியங்களை தோற்றுவித்தவர்கள் பல்லவர்கள்.பல்லவர்களின் காலத்தில் தான் பல சக்தி இலக்கியங்களை இயற்றிய ஆதி சங்கரரும் வாழ்ந்தார்.(சங்கரர்காலம் கி பி 788/820) இவர் தமிழ் உலகிற்கு செய்தது மகத்துவமான சேவை சமய போட்டியால் நலிவுற்று சண்டை இட்டு கொண்டு இருந்த சமயங்களில் மாற்று கருத்து கொண்டவர்களை வாதத்தில் வென்று ஒத்துழைத்து நின்ற 6 சமயங்களை ஒன்றாக இணைத்து இந்துமதம் என்பதை தோற்றிவித்தார்.

எனவே தமிழக வரலாற்றில் பல்லவர்கள் வரலாறு ஒரு முக்கியமான வரலாறு அவர்கள் இல்லாது இருந்தால் இன்றைக்கு தமிழ் மொழியும் எமது கலைகளும் தலைகீழாக மாறி இருக்கும். தொடர்ந்தும் மூவேந்தர்கள் என்று சேர சோழ பாண்டியர்களை மட்டும் புகழ்ந்து கொண்டு இருக்காமல் அண்ணளவாக 700 ஆண்டுகள் தனித்தும் அதற்கு முதல் 400 ஆண்டுகளாக சோழர்களுடன் இணைந்து பல்லவர்கள் என்ற பெயரை பாவிக்காமல் சோழர்களுக்கு உதவியாக தென் இந்தியாவை ஆண்ட பல்லவர்களை வரலாற்றில் சிறப்பிக்க வேண்டும்.இவர்கள் கடல் அழிவால் தொண்டை மண்டலம் வந்த பின்னரே (கி மு 200/300)இன்று தமிழ் கூறும் நல்லுலகம் வைத்திருக்கும் அநேகமான நூல்கள் உருவாகின இதை யாரும் மறுக்க முடியாது.தொல்காப்பியம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி மகாபாரதம் ,இராமாயண இதிகாசம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி சங்க இலக்கியங்கள் அகநானூறு புறநானூறு தொடங்கி ஐம் பெரும் காப்பியங்கள் வரை அனைத்தும் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி எல்லாம் சிந்தித்து பார்த்தால் இவர்கள் வருகைக்கு பின்னரே ஏற்பட்டது.அதுவரை எழுத்துவடிவம் பெறாமல் செவிவழியாகவே சொல்லப்பட்டு வந்தது.எனவே இலக்கியங்கள் எழுத்துவடிவ தோற்றத்துக்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு மிகவும் இருந்து இருக்கிறது என்பது வெளிப்படை.

இதிகாசங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் மூல பிரதிகள் வட மொழியில் இருக்கின்றது என்பதால் இவற்றை எழுதியவர்கள் வடவர்கள் என்று கூறுகின்றார்கள். வட மொழியான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை சொந்த எழுத்துவடிவம் இல்லை.இது தெளிவான ஒன்று அவர்களிடமே சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.அவர்கள் எழுதும் எழுத்து வடிவம் நாகலோகத்து நாகர்கள் உருவாக்கிய நாகரி எழுத்துவடிவம் இந்த நாகரி எழுத்துவடிவத்தை கொண்டுதான் இதை கண்டு பிடித்த தமிழர்கள் (பண்டைய நாகர்கள் எந்த கலப்பும் இன்றி முழுமையாக தமிழர்கள்)பண்டைய காலத்தில் தமிழை எழுதினார்கள்.பின்னர் பிற்காலத்தில் இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துவடிவத்தை கண்டு பிடித்ததும் தமது மூதாதையர் கண்டு பிடித்த எழுத்து வடிவத்தை சமஸ்கிரிததுக்கு கடன் கொடுத்துவிட்டு ,இன்று வட மொழி என்று வேறு கூறுகின்றார்கள்.(ஒரு எழுத்துவடிவத்தை கொண்டு பல மொழிகளை எழுதலாம்.உதரணத்துக்கு நாகரி யை இப்ப தேவநாகரி என்று மாற்றி அந்த எழுத்துவடிவத்தை கொண்டு இந்தியாவிலேயே பல மொழிகளை எழுதுகின்றார்கள்.மேற்கு உலக நாடுகளில் ஆங்கில எழுத்தை கொண்டு பல நாட்டு மொழிகளை எழுதுகின்றார்கள்) 

முதல் தோன்றிய இலக்கியங்கள் நாகரி எழுத்தில் அதில் தேர்சி பெற்று இருந்த நாகர்கள் வாழ்ந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்களின் உதவியோடு எழுதியதை பிற்கால சோழர்காலத்தில் (கி.பி 846 பின்) இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துக்களில் எழுதினார்கள். இந்த மொழி மாற்றம் செய்த பொழுதுதான் வரலாறுகள் வடவர்களுக்கு சார்பாக அனேகமாக மாற்றம் பெற்றது. இதற்கு காரணம் பிற்கால சோழர் காலத்தில் நாம் இன்று வடக்கில் இருந்து வந்தவர்கள் என்று பார்பனர்கள் என்று சொல்பவர்களை கோவில் பூசைக்களுக்கும் அரச காரியங்களுக்கும் அழைத்துவரும் முறை தொடங்கியது.அந்த காலத்தில் தான் தேவதாசிகள் முறையும் தொடங்கியது.இதற்கு முற்பட்ட காலங்களில் பிராமணர்கள்(பட்டர்கள் ) என்ற பெயரில் கோவில்களுக்கு பூசை செய்தவர்கள் பண்டைய தமிழர்களில் தோன்றியவர்கள் வடவர் கலப்பு இல்லாதவர்கள்.

வடக்கில் இருந்து வந்த பார்பனர்கள் அரசர்களை புகழ்ந்து பாடும் மரபை ஏற்படுத்தி புகழ்மாலைகளை பாடி அவர்களை வர்ணனைகளால் மூளை சலவை செய்து தாங்கள் நினைத்ததை வரலாறுகளில் எழுதினார்கள். இந்தவகையில் எழுதப்பட்டதே புராண இதிகாசமாக இன்று நாம் வாசிக்கும் புத்தகங்கள்.மூலநூல்களை தாங்கள் எடுத்து கொண்டு போனார்கள்.அதை தழுவி எழுதுகின்றோம் என்று எம்மவர்களை ஏமாற்றினார்கள். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தமிழர்களை அரக்கர்கள் குரங்குகள் என்று கூறியது இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வீர மாமுனிவரின் தமிழ்ப் பணிகள்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.வீர மாமுனிவர் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.

2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.

3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.

4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.

5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.

6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.

7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.

வீர மாமுனிவர் தமிழ் உரைநடையின் தந்தை

புதன், 6 ஆகஸ்ட், 2014

சதுரங்கம் விளையாட்டு தொடர்ச்சி -09

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.
           வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

சதுரங்க விளையாட்டு தொடர்ச்சியினை இங்கு காண்போம்.......
   (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
                 கட்டாயம் டிரா ஆகும் நிலைகள்,
          # ஒரு ராஜா + ஒரு பிஷப் VS தனி ராஜா
  # ஒரு ராஜா + ஒரு குதிரை அல்லது இரண்டு குதிரைகள் VS தனி ராஜா
                 என நிலை இருந்தால் செக்  மேட் செய்யவே முடியாது, எனவே விதிப்படி ''டிரா'' ஆகும்.
           இரண்டு குதிரைகள் இருந்தாலும் ''செக் மேட்'' செய்யவே முடியாது. பலகையில் வேறு ஏதேனும் ஆட்டக் காய்கள் இருக்க வேண்டும்,அது எதிர் அணியின் சிப்பாயாவது இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால், குதிரையை பொறுத்த வரையில் அதன் அருகில் உள்ள கட்டத்திற்கு சென்றால் எதுவும் செய்ய இயலாது, மற்ற ஆட்டக் காய்களுக்கு அவ்வாறு செல்ல இயலாத கட்டம் என ஏதேனும் ஒன்றாவது இருக்கும்.

     தனி ராஜா என்ற நிலை இல்லாமல் ,
   #ஒரு யானை எதிர்த்து ஒரு பிஷப் அல்லது குதிரை
   #இரண்டு பிஷப் எதிர்த்து ஒரு பிஷப் அல்லது குதிரை
   #ஒரு பிஷப் + குதிரை எதிர்த்து எதிர் நிற பிஷப்

                   என இறுதி ஆட்ட நிலை இருந்தாலும் டிரா ஆகிவிடும்.
கவனக்குறைவாக ஆடினால் மட்டுமே தோற்கடிக்க முடியும் எனும் இறுதி ஆட்ட நிலைகள் இவை.
         "50" நகர்வு விதி(50 moves rule) என இருப்பது போல Draw  ஆக ஆட்டம் முடிவதற்கென இன்னும் சில ''டிரா'' செய்ய வைக்கும் விதிகளும் உள்ளன.
               # தொடர்ந்து மூன்று முறை ஒரே நிலையை (repeated position) ஆடினால் ஆட்டம் டிரா ஆகும்.
              இதனை ''மிர்ரர் இமேஜ் பொசிஷன் டிரா'' என்பார்கள்.

      # செக் மேட் செய்யாமல் வெறுமனே ''செக்'' மட்டுமே தொடர்ந்து கொடுத்தாலும் விதிப்படி ''டிரா'' ஆகிவிடும். இதனை  Perpectual check"(PP) ''டிரா'' என்பார்கள். அதிக பட்சம் தொடர்ந்து 15 ''செக்'' கொடுக்கலாம் ,ஆனால் மூன்றாவது ''செக்'' வைத்து தப்பிவிட்டாலே விதியை சொல்லி "டிரா" கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
              மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிறு விதிகள் உள்ளன,
                # நமது நகர்வு செய்ய வேண்டிய சூழலில் தேவையில்லாமல் நமது ஆட்டக்காயை அல்லது  எதிராளியின் ஆட்டக்காயை " தொடக்கூடாது".
                 அப்படி  தொட்டுவிட்டால் , விதிக்குட்பட்ட நகர்வு செய்ய முடியும் எனில் அதனை நகர்த்தியாக வேண்டும். எதிராளியின் ஆட்டக்காயை தொட்டு இருக்கும்போது  அதனை வெட்ட முடியும் எனில் வெட்டியே ஆக வேண்டும்.
            இதனை "Touch piece"  விதி என்பார்கள்.
                   #  கோட்டை கட்டுதல்(castling) செய்யும் போது கூட முதலில் ராஜாவைத் தான் தொட வேண்டும், அதன் பின்னரே யானையை தொட வேண்டும், மாறி யானையை தொட்டுவிட்டால் அதனை " டச் பீசாக" கருதி நகர்த்த வேண்டும்.
          # நாம் அவசரப்பட்டு ஒரு ஆட்டக்காயை தொட்டுவிட்டோம் ஆனால் அதனை  விதிப்படியான நகர்த்தல் செய்ய வாய்ப்பே இல்லைஎன்றாலும் அடுத்து எப்பொழுது விதிப்படி நகர்த்தும் சூழல் வருகிறதோ அப்பொழுது "கட்டாயம் நகர்த்த "வேண்டும்.. இதனை "enforced move" என்பார்கள்.
                இவ்வாறு தவறுதலாக தொட்டு ஆட வேண்டிய கட்டாயத்தால் ஆடி ,ஆட்ட நிலை பாதகமாக மாறிவிடும் சூழல் உருவாகலாம், எனவே கவனமாக ஆட வேண்டும். சர்வதேச போட்டிகளில் கூட இப்படி ஆகியுள்ளது.
               # ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஆட்டக்காய்களை தொட வேண்டும்,லேசாக கட்டத்தில் இருந்து விலகியுள்ள ஆட்டக்காயினை சரி செய்ய வேண்டுமெனில் , தொடும் முன்"  "I ADJUST'" என அறிவிக்க வேண்டும், சிம்பிளாக "ADJUST" என்று சொல்வது வழக்கம்..

              இன்னும் பல விதிகள் உள்ளன ,அவற்றை எல்லாம் தேவையான இடங்களில் ஆங்காங்கே பார்க்கலாம், ஒரே நேரத்தில் வரிசையாக சொன்னால் மனதில் பதியாது.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
             # COPYCAT TRAP.
               சதுரங்கத்தில்  ஒருவர் என்ன நகர்த்துகிறாரோ! அதேபோல திரும்ப நகர்த்துபவர்களும் உண்டு, ஒருவர் நகர்த்துவதைப் பார்த்து அதேபோல காய்களை நகர்த்துபவர்களும் உண்டு. இதனை "காப்பியடிக்கும்  பூனை" என்பார்கள்.ஆனால்    ஒருவரைப்பார்த்து காப்பி  அடித்து ஆடினால் எளிதில் தோற்றுவிடுவர். 

 அப்படியே காப்பி அடிச்சும் ஆடும் ஆட்டம்,




1)e4- e5


2) Nf3 -Nf6

3)N X e5 - N X e4

வெள்ளை ஆடியதை அப்படியே திருப்பி செய்கிறது கறுப்பு.

4) Qe2 - Nf6??

5) Nc6 +

இப்படி செய்வதை  discoverd chcek என்பார்கள், ராஜாவுக்கு செக் அதே நேரம் ராணியும் தாக்கப்படுகிறது,எனவே வெள்ளைக்கு கறுப்பு ராணி "பலியாவது" நிச்சயம்.




         இவ்வாறு விளையாடி  பிடிபடுவதை COPY CAT TRAP என்பார்கள், இப்படி துவக்க ஆட்டத்தில் ,நாம ஏன் யோசிச்சு ஆடணும்? , வெள்ளை ஆட்டக்காரர் செய்வதை அப்படியே செய்வோம் என்று ஆடியவர் பிடிபடுவதை  "GIF" அனிமேஷனில் பாருங்கள்!

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
           COPY CAT TRAP அனிமேஷன்.




           

சதுரங்கம் விளையாட்டு தொடர்ச்சி-08

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.
                   வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
             

  (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
 சதுரங்க விளையாட்டின் தொடர்ச்சி இங்கு காண்போம்..........
    சதுரங்கத்தின் வரலாறு,விளையாடத் தேவைப்படும் தளவாடங்கள், ஆட்டக் காய்கள் மற்றும் அவற்றின் நகர்வு முறைகள், நகர்வுகளை குறிப்பு எழுதுவது ஆகியனவற்றை கடந்த  ஏழு பதிவுகளில் கண்டோம், 
   


                இனி சதுரங்க ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்வது பற்றி  காண்போம்.
                   # சதுரங்க ஆட்டம் என்பது "மூளைக்கு வேலை கொடுக்கும் அக உணர்வு விளையாட்டு" ஆகும். சதுரங்கப்பலகையில் ஆடும் ஆட்டத்தினை விட "நம் மூளையில்" மனத்திரையில் அதிக ஆட்ட வகைகளை ஆடி பார்க்க நேரிடும், பின்னர் அதனை ஆட்டப் பலகையில் வெளியீடாக காட்ட வேண்டும்.

"MIND PLAYS THE GAME"

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
            அவ்வாறு விளையாட நம்மை தயார்படுத்திக் கொள்வது எப்படி?
ஒரு நல்ல சதுரங்க விளையாட்டு வீரராக தயார் படுத்திக்கொள்ள ஒரு அடிப்படையான திட்டமிட்ட அணுகு முறை தேவையாகும், அதில் மிக முக்கியமான அம்சங்கள் கீழ் கண்டவையாகும்.

# துவக்க ஆட்டம்(Chess Openings)

# திட்டமிடுதல் (Chess strategy )

# ஆட்ட நுட்பங்கள்(Chess tactics )

# இறுதி ஆட்டம் (Chess Endings )

# அனுபவம்( Chess experience )

           இந்த அடிப்படையான ஐந்து பயிற்சிகளும் அவசியம்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
       பொதுவாக துவக்க ஆட்டத்தினை கற்றுக்கொள்வதில் இருந்து ஆரம்பித்து ஐந்து அலகுகளிலும் பயிற்சியினை பெறலாம், ஆனால் அப்படி செய்வது சில சமயங்களில் குழப்பத்தினையும் அளிக்கலாம் என்பதால்  ஏதேனும் ஒரு நிலையினை எடுத்துக்கொண்டு பயிற்சியினை ஆரம்பித்து வட்டவடிவில் சுற்றினை பூர்த்தி செய்து பயிற்சியினை நிறைவடையவும் செய்யலாம்.
         இப்படி வட்டவடிவில் காட்டியிருப்பதே துவக்க நிலை,இறுதி நிலையென வரையறையாக ஒரு நிலைப்பாடே இல்லாமல் வட்டத்தின் எந்நிலையிலும் நமது புரிதலுக்கு ஏற்ப கற்றலை துவக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
               அது எப்படி ஆரம்பத்திலேயே  அனுபவமான  துவக்கம் கிடைக்கும் என்று கேட்கலாம், ஏற்கனவே விளையாடுபவர்களின் அனுபவத்தினை கேட்டு , அவர் என்ன செய்தார்? , விளையாட்டை எப்படி கையாண்டார்? எனத்  தெரிந்து கொண்டு அதனையே செய்து பார்ப்பது தான்!

     சதுரங்க ஆட்டக்காரரின் அனுபவத்தினை கேட்டு ,அதனையே பழகிப் பார்த்தால் அதுவே நமது அனுபவமாகவும் ஆகிவிடும்!
     துவக்க நிலை ஆட்டம் ;  இது ஆட்டத்தின் துவக்கத்தில் ,சதுரங்கப்பலகையில் அனைத்து ஆட்டக்காய்களும் இருக்கும் நிலையில் , முதலில் ஆடப்படும் 10 -12 நகர்வுகளை குறிக்கும்.

        சதுரங்கப் பலகையின் அடிப்படையினை இப்பொழுது தான் புரிந்துகொள்ள ஆரம்பித்து உள்ளவர்களுக்கு , ஒவ்வொரு ஆட்டக் காயின் நகர்வு போக்கும் புரியாத நிலையில் பின்பற்ற கடினமாக இருக்கும்.
                       மேலும் துவக்க ஆட்டங்களில் பல வகை இருக்கு, அவற்றில் பல கிளை வகைகளும் இருக்கு, இவற்றை எல்லாம் ஒவ்வொரு ஆட்டக்காயின் பலம்,பலவீனம், நகர்வின் தன்மை என சரியாக உள்வாங்கிக்கொள்ளாத ஆரம்ப நிலையிலே சொன்னால் மனதில் பதிய கடினமாக இருக்கலாம். 

            எனவே ஆட்டக்காய்கள் குறைவாக உள்ள , இறுதி ஆட்ட நிலையில் எப்படி ஆடி வெற்றி பெறுவது? என இறுதி ஆட்ட வகையினை கற்றுக் கொள்வதில் இருந்து பயிற்சியினை ஆரம்பிப்பது எளிதாக இருக்கும்.
       

                 இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காயின் நகர்வு, அதன் பலம், பலவீனம்  போன்றவற்றை  எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியும். பல கிராண்ட் மாஸ்டர்கள் "இறுதி ஆட்டத்தினை " கற்றுக் கொண்டு ஆடத் துவங்குவதே சரியான அணுகுமுறை என்கிறார்கள்.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
        இறுதி ஆட்டத்தினை கற்றுக் கொள்வதையே துவக்க நிலைப் பயிற்சியாக கொண்டு ,"JOSE’ R. CAPABLANCA" என்ற முன்னாள் உலக சாம்பியன்  "Chess Fundamentals"  என்ற சதுரங்க விளையாட்டிற்கான  பயிற்சி நூலினை எழுதியுள்ளார்.அதனை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதிய தகவல்களையும் இப்போது நாம் அறிந்துகொள்வோம்.
இப்பொழுது வெள்ளை அணி ஆட்டக்காரர் ,ஆட்டப்பலகையில் வீரர்களோ அல்லது வேறு எந்த ஆட்டக்காய்களோ இல்லாத நிலையில்   ஒரு ராஜா, ஒரு யானையை வைத்துக்கொண்டு  எப்படி ஒற்றை கறுப்பு ராஜாவை  செக் மேட் செய்து வெற்றியடைகிறார் என்பதைக் காண்போம். (மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் இப்போது ஆட்டப் பலகையில் வீரர்களோ வேறு எந்த ஆட்டக்காய்களோ இல்லாத சூழல்).

ராஜா+ யானை VS ராஜா: இறுதி ஆட்ட நிலை:
             இந்த இறுதி ஆட்ட நிலை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் , இதில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் என்னவெனில் , எவ்வளவு குறைவான நகர்த்தல்களில் செக் - மேட் செய்து ஆட்டத்தினை முடிக்கிறோம் என்பதில் தான் உள்ளது.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
               ஏன் எனில் சதுரங்கத்தில் " 50 நகர்வுகள் விதி"(50 moves Rule) என ஒன்று உள்ளது. அந்த விதிப்படி,
              # 50 நகர்த்தல்களுக்குள் ஏதேனும் ஒரு  "வீரன்" நகர்த்தப்படவில்லை எனில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்படும்.
               இந்த இறுதி ஆட்ட சூழலில் பலகையில் "வீரனே" இல்லாததால் , இல்லாத வீரனை நகர்த்தி ஆடமுடியுமா? எனவே 50 நகர்த்தல்களுக்குள்  செக் - மேட் செய்யவில்லை எனில் ஆட்டம் டிரா என தானாக அறிவிக்கப்பட்டுவிடும்.
          # 50 நகர்த்தல் விதியின் இன்னொரு பிரிவின் படி , 50 நகர்த்தல்களுக்கு எவ்வித ஆட்டக்காய்களும் வெட்டப்படவில்லை எனில் ஆட்டம் ''டிரா'' ஆகும்.

This rule applicable at all stages of the game.
 

                   # கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் , விளையாடும் நேரம் ஆகும். ராஜா + யானை வைத்து ஆடுபவருக்கு நேரம் குறைவாக இருந்து , வெறும் ராஜாவுடன் ஆடுபவருக்கு நேரம் அதிகமாக இருக்கிறது என்றால், தேவையில்லாத நகர்வுகள் செய்வதில் கால விரயம் ஆகி ,நேரம் தீர்ந்து போனால் , நேரத்தின் அடிப்படையில் தோற்க நேரிடும்.
                    மேலும் ஒற்றை யானையை வைத்துக் கொண்டு வெற்றி அடைய முடியாது என நினைத்து ''டிரா'' செய்துவிடலாம்!,  என நினைத்து ஏற்றுக் கொண்டால் ,நமக்கு தான் இழப்பு ஆகும்.
               எனவே ஒற்றை யானையை வைத்து குறைவான நகர்த்தல்களில் ''செக் மேட்'' செய்ய தெரிந்து கொள்ள வேண்டும்.
            # தனி ராஜா ஏதேனும் ஒரு மூலையிலும், யானை மற்றும் ராஜா எதிர் பக்கத்தின்  மூலைகளிலும் இருக்குமானால் குறைந்த பட்சம் 10 நகர்த்தல் களில் செக் மேட் செய்து விட முடியும்.
          # தனி ராஜா ஆட்டப்பலகையின் மையத்தில் இருக்குமானால் 11-12 நகர்த்தல்களில் செக் -மேட் செய்து விட முடியும்.

   நிலை-1: தனி ராஜா ஒரு மூலையில் உள்ளது.
பத்து நகர்த்தல்களில்  செக்- மேட் செய்வதைக்  காண்போம்.
படம்-1



 white to move.
         1) Ra7 -Kg8

           வெள்ளை தனது முதல் நகர்வாக , ராஜாவை நகர்த்தாமல் யானையினை a7 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது, இதன் மூலம் கறுப்பு ராஜா கடைசி ரேங்கினை விட்டு வெளியில் நகரமுடியாமல் கட்டுப்படுத்தப்படுள்ளது. இதனால் அதிக அலைச்சல் இன்றி குறைவான நகர்வில் செக் மேட் செய்ய இயலும்.
        கறுப்பு ராஜாவிற்கு வேறு நகர்விற்கு வழியில்லை எனவே g 8 கட்டத்திற்கு செல்கிறது.
           2)K g 2 - K f 8





     வெள்ளை ராஜா . மூலைவிட்டமாக g2 கட்டத்திற்கு செல்கிறது.
       ஏன் இவ்வாறு நகர்த்த வேண்டும்?
            h1 கட்டத்தில் இருக்கும் ராஜா அடுத்து  நேர் வரிசையில்  h2, h3... h6 என முன்னேறி சென்றால் என்ன ?
          # பொதுவாக சதுரங்கப்பலகையில் நிறைய கட்டங்களை கடக்க வேண்டும் எனில் மூலைவிட்டமாக பயணித்தால் ,அதிக கட்டங்களை குறைவான நகர்த்தல்களில் கடக்கலாம்.
           # அடுத்து , இறுதி ஆட்ட நிலையில் எதிர் ராஜாவினை துரத்திச் செல்ல வேண்டும் என்றால் ,அல்லது அதனை எளிதில் பின் தொடர வேண்டும் என்றால் அதற்கு நேருக்கு நேரான கட்டத்தில் நமது ராஜா இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், அப்பொழுது தான் நமது "ரீச்சில்" இருக்கும்.
           # இப்படி தனித்த ராஜாவினை ''செக் மேட்'' செய்ய வேண்டும் எனில் அதனை ஒரு குறுகிய எல்லைக்குள் அடைத்துவிட வேண்டும்.

                   அதாவது கடைசி ரேங்க் அல்லது வரிசையின் ஓரமாக தள்ளிக்கொண்டு செல்ல வேண்டும், பின்னர்  நமது ராஜாவினை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக எதிர் ராஜாவுக்கு ஒரு வரிசை அல்லது ரேங்க் விட்டு நேர் எதிராக கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.
                அதன் பின்னரே இன்னொரு சக்தி வாய்ந்த ஆட்டக்காய் கொண்டு . பலகையின் ஏதேனும் ஒரு மூலைக்கோ அல்லது நமது ராஜாவுக்கு நேர் வரிசையில் ஒரு கட்டம் தள்ளியுள்ள எதிர் கட்டத்தில் ,கடைசி வரிசையில் எதிர் ராஜா இருக்குமாறு செய்து கொண்டு செக் மேட் செய்ய வேண்டும்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
                  ஒரு ராஜா ,யானை மட்டும் உள்ள சூழலில் ,யானையைக் கொண்டு ,எதிர் ராஜாவை முன்னரே கட்டுப்படுத்தியாகிவிட்டது, ராஜாவுக்கு நேருக்கு நேராக முன்னேற வேண்டும் , அதே சமயம் விரைவாக 6 வது ரேங்கினை அடைய வேண்டும் என்பதால் ராஜாவை மூலைவிட்டமாக g2 கட்டத்தில் வைத்துள்ளோம். 3)Kf3 - Ke8 4)Ke4 -Kd8 5)Kd5 -Kc8
                 கறுப்பு ராஜா c8 கட்டத்திற்கு சென்றுள்ளது எனவே அதற்கு நேராக c6 கட்டத்திற்கு வெள்ளை சென்றால் ,ஆட்டத்தினை இழுக்க ,கறுப்பு அடுத்த நகர்வில் மீண்டும் d-8 என  பின்னால் நகரக்கூடும் ,வெள்ளை ஆட்டக்காரரின் முதல் நோக்கம் ,கறுப்பு ராஜாவினை ஒரு மூலைக்கு தள்ளி செல்ல வேண்டும் என்பதே ,எனவே இப்பொழுது  வெள்ளை ராஜா c-6  கட்டம் செல்லாமல் ,
6)Kd6 -Kb8

                 # கறுப்பு ராஜா தொடர்ந்து கடைசி ரேங்கின் எட்டாவது கட்டங்களின் வழியாக யானையை நோக்கி நகர்கிறது, அதற்கு வேறு வழியில்லை.
           # வெள்ளை ராஜா ,தொடர்ந்து மூலை விட்டமாக பயணித்து ,கறுப்பு ராஜாவுக்கு நேராக ,அதே வரிசையில் இருக்குமாறு  பார்த்துக்கொண்டு முன்னேறி ஆறாவது ரேங்கினை அடைந்துவிட்டது.
                 இந்நிலையில் ஒன்றினை கவனிக்க வேண்டும் , கறுப்பு ராஜா தானாக b8 கட்டத்திற்கு சென்று ஒரு மூலையை நோக்கி சென்றுவிட்டது.  அவ்வாறு மூலை நோக்கி  b 8 செல்லாமல் , கறுப்பு ராஜா c8 இல் இருந்து   d-8க்கு கறுப்பு ராஜா மீண்டும் வந்தால், d6 இல் இருக்கும் வெள்ளை ராஜாவுக்கு நேரான வரிசையில் d-8 இல் கறுப்பு ராஜா வந்துவிடும் ,எனவே  யானையை  a8 கட்டத்திற்கு நகர்த்தி  செக் மேட் செய்து விடலாம். இதற்காகத்தான் வெள்ளை ராஜா c-6  கட்டம் செல்லாமல் ,d6 க்கு வருகிறார்.இதன் மூலம் மறைமுகமாக கறுப்பு ராஜா மூலைக்கு செல்ல அழுத்தம் அளிக்கப்படுகிறது.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)

              எப்பொழுதுமே இன்னொரு மாற்று நகர்வினையும் கணக்கில் வைத்து இரண்டுக்கும் ஏற்ற ஒரு நகர்வினை செய்ய வேண்டும்.
           இப்பொழுது தொடர்ந்து மூலை கட்டங்களான a8 or b8 இல் வைத்து செக் மேட் செய்ய முடியும்.
  7)Rc7 -Ka8


        b8 இல் இருக்கும் கறுப்பு ராஜா மீண்டும் Kc8 என முன்னால் ,பின்னால் என இழுக்காமல் இருக்க யானையை c7 கட்டத்தில் வைத்து அடைக்கிறோம்.
          இப்பொழுது கறுப்பு ராஜாவிற்கு வேறு கட்டங்களுக்கு செல்ல வழியில்லை என்பதால் K-a8 என மூலைக்கு சென்றுவிடுகிறது.
   8)Kc6 -Kb8
               இப்பொழுது , வெள்ளை ராஜா , கறுப்பு ராஜாவின் வரிசைக்கு நேராக கொண்டு செல்ல வேண்டும், எனவே c6 கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது. இனிமேல் கறுப்பு ராஜாவிற்கு a8,b8 ஆகிய இரு கட்டங்களில் மட்டுமே நகர்வு சாத்தியமாகும் எனவே வேறு வழியில்லாமல் Kb8
 கட்டத்திற்கு வருகிறது.
      9)Kb6-Ka8 

               ராஜாவிற்கு நேர் வரிசையில் ராஜா என்ற கொள்கையின் படி வெள்ளை ராஜா Kb6 கட்டத்திற்கு நகர்கிறது. இதன் மூலம் ஏ-8 இல் அல்லது பி-8 இல் வைத்து கறுப்பு ராஜாவினை செக் மேட் செய்வது சாத்தியமாகிறது.
                     கறுப்பு ராஜாவிற்கு வேறு வழியே இல்லை என்பதால் மீண்டும் a8 கட்டத்திற்கு இறுதியாத்திரையாக செல்கிறது.
                  இனி வெள்ளை ஆட்டக்காரரின் ஒரே நகர்த்தலில் செக்மேட் செய்துவிடலாம்.



10) R c8 +#
               வெள்ளை யானை "c8 " கட்டத்திற்கு சென்று செக் வைக்கிறது, கறுப்பு ராஜாவினால் வேறு எந்த கட்டத்திற்கும் செல்ல இயலாது ,அதன் முன்னால் உள்ள a7,b7 ,c7 ஆகிய கட்டங்கள் வெள்ளை ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஒரு ராஜாவின் அடுத்த கட்டத்திற்கு இன்னொரு ராஜா செல்ல இயலாது, எ னவே யானையின் செக் என்ற இறுதி கட்டத்தினை தவிர்க்க இயலாத "கறுப்பு ராஜா" செக் & மேட் ஆகிவிட்டது.
    இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளின் எண்ணிக்கை "10" மட்டுமே.
                 மிகச்சரியாக ஆடினால் யார் வேண்டுமானாலும் இப்படி "10" நகர்வுகளில் செக் மேட் செய்யலாம். அதிக பட்சம் 15 நகர்வுகளுக்குள் ஆட்டத்தினை முடிக்குமாறு பழகி கொள்ள வேண்டும்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
             இந்த ஆட்டத்தில் "கறுப்பு ராஜா" தொடர்ந்து ஒரே பக்கமாக நகர்ந்தது ,அப்படி செய்யாமல் முன்னால் , பின்னால் என நகர்த்தினால் என்ன செய்வது ?என்றால் , நமது ராஜாவின் எதிர் வரிசையில் கடைசி ரேங்கில் இருக்குமாறு செய்ய வேண்டும் அல்லது , யானையைக் கொண்டு ஒரு சில ''செக்'' வைத்து ஒரு மூலைக்கு விரட்ட வேண்டும்.
                   இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளையும் "GIF" அனிமேஷன் ஆக மாற்றி இணைக்கப்பட்டுள்ளது.இதனைப் பார்த்து பழகிக்கொள்ளவும்.
 

        அனிமேஷன்:

           # ஒற்றை ராஜா +யானை எதிர்த்து ஒற்றை ராஜா என்ற இறுதி ஆட்டத்தில் ஏதேனும் ஒரு மூலை என நான்கு மூலைகளில் வைத்து செக் மேட் செய்யலாம்.
                   அல்லது நான்கு பக்கங்களில் கடைசி ரேங்க் அல்லது வரிசையில் நமது ராஜாவுக்கு நேருக்கு நேராக ஒரு கட்டம் தள்ளி முன்னால் உள்ள நிலையில் யானை மூலம் செக் மேட் செய்யலாம்.
             எல்லாவற்றின் அடிப்படையும் ஒன்று தான் ஆனால் எட்டு இடங்களில் செக் மேட் செய்ய இயலும் , மற்றபடி வேறு எந்த நிலையிலும், அல்லது சதுரங்கப்பலகையின் மையத்தில் வைத்தோ செக் மேட் செய்ய இயலாது.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
            புரிந்து கொள்ள வசதியாக எட்டு நிலைகளில் செக் மேட் செய்யப்படும் படங்கள்.
  நான்கு மூலைகளில் செக்-மேட்:



நான்கு பக்கங்களிலும் கடைசி வரிசையில் செக்-மேட்:



           # இறுதி ஆட்டத்தில் எவ்வகையான ஆட்டக்காய்கள் உள்ள நிலையில் என்ன முடிவு கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்,
         # ஒரு ராஜா +யானை VS தனி ராஜா
            # ஒரு ராஜா + ராணி VS தனி  ராஜா

          # ஒரு ராஜா + இரண்டு பிஷப் VS தனி ராஜா
            # ஒரு ராஜா + ஒரு பிஷப்& குதிரை VS  தனி ராஜா
                  மேற்கண்ட இவ்வகையான நிலைகளில் கூடுதல் ஆட்டக்காய்கள் உள்ளவருக்கு வெற்றி கிடைக்கும்.