சனி, 26 ஜூலை, 2014

சில சொற்களை பிரித்தறிதல்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
           சில சொற்களையும் அவற்றை எப்படி பிரித்தெழுதுவது என்பதையும் காண்போம்.

பைந்தளிர் - பசுமை + தளிர்
புன்மனத்தார் - புன்மை + மனத்தார்
மெல்லடி - மென்மை + அடி
சிற்றில் - சிறுமை + இல்
வெந்தழல் - வெம்மை + தழல்
நற்செங்கோல் - நன்மை + செம்மை + கோல்
தன்னொலி - தன்மை + ஒலி
தீந்தமிழ் - தீம் + தமிழ்
தீஞ்சுடர் - தீமை + சுடர்
பூம்புனல் - பூ + புனல்
அந்நலம் - அ + நலம்
எந்நாள் - எ + நாள்
ஆரிடை - ஆ + இடை
முன்னீர் - முன் + நீர்
இருகரை - இரண்டு + கரை
மூவைந்தாய் - மூன்று + ஐந்தாய்
கீழ்க்கடல் - கிழக்கு + கடல்
கட்புலம் - கண் + புலம்
எஞ்ஞான்றும் - எ + ஞான்றும்
அங்கயற்கண் - அம் + கயல் + கண்
வாயிற்கெடும் - வாயால் + கெடும்
நீனிலம் - நீள் + நிலம்
தெண்ணீர் - தெள் + நீர்
ராப்பகல் - இரவு + பகல்
தேவாரம் - தே + ஆரம்
முட்டீது - முள்+ தீது
வான்மதி - வானம் + மதி
பன்னலம் - பல + நலம்
சீரடி - சீர் + அடி
சீறடி - சிறுமை + அடி
உண்டினிதிருந்த - உண்டு + இனிது + இருந்த
மருட்டுரை - மருள் + உரை
இன்னரும்பொழில் - இனிமை + அருமை + பொழில்
மைத்தடங்கண் - மை + தட + கண்
போதிலார் -போது + இல் + ஆர்
வேறல் - வெல் + தல்
முன்றில் -முன் + இல்
வேப்பங்காய் - வேம்பு + காய்
ஆண்டகை - ஆண் + தகை
இலங்கருவி - இலங்கு + அருவி
சாந்துணை - சாகும் + துணை
கடிதீங்கு - கடிது + ஈங்கு
வேர்கோட்பலவின் - வேர் + கோஷீமீ + பலவின்
மாயங்கொல்லோ - மாயம் + கொல் + ஓ
தங்கால் - தன் + கால்
கொங்கலர்தார் - கொங்கு + அலர் + தார்
நட்பாடல் - நட்பு + ஆடல்
பாம்பெள்ளெனவே - பாம்பு + எள் + எனவே
முயற்காதிலை - முயல் + காது + இலை
செங்காலன்னம் - செம்மை + கால் + அன்னம்
பதினோராண்டுகள் - பதின் + ஓர் + ஆண்டுகள்
கேளிர் - கேள் + இர்
உண்ணிகழ் - உள் + நிகழ்
தீதொரீஇ - தீது + ஓரீஇ

உவமையால் விளக்கப்பெறும் பொருள்கள்-

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி
வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை

நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல - நிலையாமை

காராண்மை போல ஒழுகுதல் - வள்ளல் தன்மை

நிலத்தறைந்தான் கை பிழையாதற்று - துன்பம்

விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது

புதையல் காத்த பூதம் போல - பயனின்மை

தாமரை இலை தண்ணீர் போல - பற்றற்றது

பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி

கடல் மடை திறந்த வெள்ளம் போல - விரைவாக வெளியேறுதல்

உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு

இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி

புலி சேர்ந்து போகிய கல்லனை போல - வயிறு

சிப்பிக்குள் முத்து போல - மேன்மை

உமிகுற்றி கை வருந்தல் போல - பயனற்ற சொல்

நீரும் நெருப்பும் போல - விலகுதல்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் - முயற்சிக்கேற்ற பலன்

எட்டாப்பழம் புளித்தது போல - விலகுதல்

கடன்பட்டவர் நெஞ்சம் போல - வேதனை

நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளரின் தொகுப்பு

உடுக்கை இழந்தவன் கை போல - நட்பு

அன்றளர்ந்த தாமரை போல - சிரித்த முகம்

பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல்

குன்றேறி யானை போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு

கனியிருப்ப காய்கவர்ந்தற்று - இன்னா சொல்

உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு

பகலவனை கண்ட பனிபோல - துன்பம் நீங்கிற்று

சிறுதுளி பெரு வெள்ளம் - சேமிப்பு

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - பாசம், பந்தம்

நகமும் சதையும் போல - ஒற்றுமை

நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை

கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு

அடியற்ற மரம் போல - வீழ்ச்சி

செல்லரித்த நூலை போல - பயனின்மை

வேலியே பயிரை மேய்ந்தது போல - நம்பிக்கை துரோகம்

கிணற்றுத் தவளை போல - அறியாமை

செவிடன் காதில் ஊதிய சங்கு போல - பயனற்றது

அச்சில் வார்த்தாற் போல - உண்மைத் தன்மை

ஊமை கண்ட கனவு போல - இயலாமை

மதில் மேல் பூனை போல - முடிவெடுக்காத நிலை

பசுத்தோல் போர்த்திய புலி - வஞ்சகம்

குரங்கு கையில் பூமாலை போல - பயனற்றது

நீறு பூத்த நெருப்பு போல - பொய்த்தோற்றம்

இலைமறை காளிணி போல - மறைபொருள்

அத்தி பூத்தாற்போல - எப்பொழுதாவது

பசுமரத்தாணி போல - ஆழமாக பதித்தல்

நாய் பெற்ற தெங்கப்பழம் - அனுபவிக்க தெரியாமை

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - துன்பத்தை

மழை காணா பயிர் போல - வாட்டம் அதிகப்படுத்துதல்

திருடனுக்கு தேள் கொட்டியது போல - தவிப்பு

திருக்குறள்......

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      

திருக்குறள்......

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு மு.கருணாநிதி
• திரு மு.வரததாசனார்
• திரு சாலமன் பாப்பையா
• திரு பரிமேலழகர்
• திரு மணக்குடவர்

ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis
மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
            அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்.
***************************************

தேசிய கவி, சிந்துக்குத் தந்தை,
விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்

பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,
இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,
பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை

காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -
வேங்கட ராஜூலு ரெட்டியார்

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்

சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

சொல்லின் செல்வன் - அனுமன்

தமிழ் தென்றல் - திரு.வி.க.

வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

தனது கல்லறையில் தன்னை ஓர்
தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.

ஆசு கவி - காளமேகப் புலவர்.

எழுத்துக்கு - இளம்பூரணார்.

சொல்லுக்கு - சேனாவரையார்.

உரையாசிரியர் - இளம்பூரணார்.

உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்

தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி.

புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்

ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்

மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

கவிக்கோ - அப்துல் ரஹ்மான்

தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்,
தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி

தமிழ் முனி, குருமுனி, குறுமுனி,
பொதிகை முனி - அகத்தியர்

தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை
நனி சொட்ட சொட்ட பாடிய கவி,
உத்தம சோழ பல்லவராயன்,
இராமதேவர் (கல்வெட்டுகள்),
அருண்மொழித் தேவர் - சேக்கிழார்

இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்

முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை

சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்

தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின்
சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்

தென்னாட்டு பெர்னாட்ஷா,
பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில்
புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி

தமிழ் தாத்தா - உ.வே.சா

தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்

தமிழ் நாடக தலைமையாசிரியர்
நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்

உவமைக் கவிஞர் - சுரதா

தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்

தமிழ் உரைநடையின் தந்தை,
தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்

குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,
தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,
பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு
- வாணிதாசன்.

கவி யோகி - சுத்தானந்த பாரதி.

தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.

தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்

வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.

ஆசிய ஜோதி - நேரு

ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி

மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்

திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்

தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா

தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ

பண்டித மணி - கதிரேசன் செட்டியார்

சிவபெருமானால் அம்மையே
என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்

வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி

பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்

தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன்
(சித்திரப்பாவை)

தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்

கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்

திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி

- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)

நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.

மண் தோய்ந்த புகழினான் - கோவலன்

வீடு வீடாக பிச்சையெடுத்த
தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்

பொய்யா குலக்கொடி நதி - வைகை

கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்

நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை

கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை

தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்

தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன்
- சீத்தலைச் சாத்தனார்

நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்

தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்

தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன்,
பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்

சூடிக்கொடுத்த சுடர்கொடி,
வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்

குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா

மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்

திராவிட ஒப்பிலக்கண தந்தை - கார்டுவெல்

நவீன கம்பர் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நாவலர் - சோமசுந்தர பாரதி

இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே

ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்

ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்

கவியரசு - வைரமுத்து,கண்ணதாசன்

திருக்குறளார் - வி.முனுசாமி

கவிப்பேரரசு - வைரமுத்து

தசாவதாணி - செய்கு.தம்பியார்

பண்மொழிப் புலவர் -அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்

திருமுறைகளை தொகுக்குமாறு
வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்

சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு,
தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்

தோடுடை செவியன், காளி வள்ளல்.
ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல்,
திராவிட சிசு, நாளும் இன்னிசையால்
தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்

ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார்
வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்.

நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்

மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்

விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.

தேசியம் காத்த செம்மல் (திரு.வி.க),
பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் -முத்துராமலிங்க தேவர்

திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்

இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்..
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
ஓரெழுத்து ஒரு மொழி


தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நன்னூல் சூத்திரப்படி 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனித்த பொருளுண்டு.

உயிர் எழுத்துகள்:

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ

'க' வரிசை:

கா,கூ,கை,கோ

'ச' வரிசை:

சா,சீ,சே,சோ

'த' வரிசை:

தா,தீ,தூ,தே,தை

'ந' வரிசை:

நா,நீ,நே,நை,நோ

'ப' வரிசை:

பா,பூ,பே,பை,போ

'ம' வரிசை:

மா,மீ,மூ,மே,,மை,மோ

'வ' வரிசை:

வா,வீ,வை,வௌ

'ய' வரிசை:

யா

பெரும்பாலும் நெடில் இனத்தில் வரும்.குறில் இனம் என்று பார்த்தால் உயிர் மெய் எழுத்துக்களான 'நொ' மற்றும் 'து' போன்றவை ..

மேற்கண்ட 42 எழுத்துக்களும் நன்னூல் குறிப்பிடப்படுபவை.

ஓரெழுத்து ஒருமொழி

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
           நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்துக்களின் பொருளையும் அது தவிர முந்தைய வினாத்தாள்களில் கேட்கப்பட்ட சில ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அதற்கான முதன்மையான பொருளையும், பொருளைச் சார்ந்த வார்த்தைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓரெழுத்து ஒருமொழி



எட்டு,அழகு,சிவன்



பசு,ஆன்மா,எருது



'அரை'யின் தமிழ் வடிவம்



ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி



சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)



ஊண்,இறைச்சி,உணவு



வினா எழுத்து,ஏழு(தமிழ்)



அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு



தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்



மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை



உலகம்,ஆனந்தம்



கடவுள்,பிரம்மன்,அக்னி,ஒன்று

கா

சோலை,காத்தல்,காவல்

கி

இறைச்சல் ஒலி

கு

பூமி,உலகம்,குற்றம்

கூ

பூமி,உலகம்,கூகை

கை

உறுப்பு,ஒழுக்கம்,சிறகு,ஒப்பனை

கோ

அரசன்,தலைவன்,பசு,இறைவன்

கௌ

கொள்ளு,தீங்கு,பற்று

சா

சாதல்,இறத்தல்,சோர்தல்

சி/சீ

இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு

சு

விரட்டுதல்,சுகம்,மங்களம்

சே

எருது,சிகப்பு,மரம்

சை

கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி

தா

தருதல்,கொடுத்தல்,கேடு

தீ

நெருப்பு,சினம்,தீமை,நரகம்

து

உண்,அசைதல்,உணவு

தூ

வெண்மை,தூய்மை,பகைமை

தே

தெய்வம்,கடவுள்,அருள்

தை

மாதம்,தைத்தல்,அலங்காரம்

நா

நாக்கு,சொ,நடு,அயலர்

நீ

முன்னிலை

நே

அன்பு,அருள்,நேயம்

நை

நைதல்,வருந்துதல்

நொ/நோ

துன்பம்,நோய்



நூறு

பா

பாட்டு,அழகு,பாதுகாப்பு

பி

அழகு,பிறவினை விகுதி

பீ

பெருமரம்,மலம்

பூ

மலர்,பூமி,பிறப்பு

பே

நுரை,மேகம்,அச்சம்

பை

பசுமை,கைப்பை,இளமை(பையன்)

போ

போதல்,செல்லுதல்



சந்திரன்,சிவன்

மா

பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்

மீ

மேலே,உச்சி,ஆகாயம்

மூ

மூப்பு,முதுமை,மூன்று

மே

அன்பு,மேன்மை,மாதம்,மேலே

மை

அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு

மோ

மோத்தல்,முகர்தல்



தமிழ் எழுத்து என்பதன் வடிவம்

யா

யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்



கால் பாகம்

வா

வருதல்,தாவுதல்,உண்டாக்குதல்

வி

அறிவு,நிச்சயம்,ஆகாயம்

வீ

மலர்,விரும்புதல்,பறவை

வை

கூர்மை,வைத்தல்,வைக்கோல்

வௌ

கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு

குறிப்பு:

ஓரெழுத்து ஒரு மொழியைப் பொறுத்தமட்டில் ஒரு சொல்லுக்கு இணையான சொற்களை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

(எ.கா)

மா-பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்

இதில் 'பெரிய' என்பதற்கு இணையான 'உயர்ந்த' என்ற வார்த்தையையும் தெரிந்திருக்க வேண்டும்.

பெயர்ச்சொல்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
                    பெயர்ச்சொல் என்றால்என்ன?

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச் சொல் ஆகும்.அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம்..

இடுகுறி பெயர்:

ஒருபொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல்இட்டுவழங்கியபெயரே இடுகுறிப்பெயர்..

எ.கா: மரம்,மலை,மண்

காரணப் பெயர்:

ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப் பெயர்.

எ.கா:முக்காலி,நாற்காலி,கருப்பன்

பெயர்ச்சொல்லின்வகைகள்:

பெயர்ச்சொல்ஆறுவகைப்படும்.
பொருட்பெயர்

(எ.கா)பணம்,மனிதன்,விலங்கு,மரம்
இடப்பெயர்

பள்ளி,குளம்,வீதி,நாடு,ஊர்
காலப்பெயர்

மணி,நாள்,வைகறை,இளவேனில்,சித்திரை
சினைப்பெயர்

கை,கால்,இலை,காம்பு,காய்,பூ
பண்புப்பெயர்

வட்டம்,நிறம்,அளவு,சுவை,செம்மை
தொழிற்பெயர்

எழுதுதல்,ஓடுதல்,பாடுதல்,தைத்தல்

ஒரு பொருளைக் குறித்து வந்தால்அது பொருட்பெயர்.

ஒரு இடத்தைக் குறித்து வந்தால் அது இடப்பெயர்.

ஒரு காலத்தைக் குறித்து வந்தால் அது காலப் பெயர்.

ஒரு உறுப்பை குறித்துவந்தால்அது சினைப்பெயர்.

ஒரு பொருளின் பண்பை குறித்து வந்தால் அது பண்புப் பெயர்.

(தொல்லை,மாண்பு,மாட்சி,நன்றி,நன்று,நலம்,நன்னர்போன்றவார்த்தைகளும் பண்பு பெயர்கள்தான் குழப்பம் வேண்டாம்)

ஒருதொழிலைக்குறித்துவந்தால்அது தொழிற்பெயர்.
(ஆட்டம்,கொலை,அழுகை,பார்வை,கடவுள்,கோட்பாடு,சாக்காடுபோன்றவையும்.தொழிற்பெர்கள்தான்குழம்பி விடவேண்டாம்.மனதில்நிறுத்திக்கொள்ளுங்கள்)

தொழிற்பெயர்இரண்டுவகைப்படும்

அ. முதற்நிலைத்தொழிற்பெயர்
ஆ. முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயர்

அ. முதல்நிலைதொழிற்பெயர்

பெரும்பாலும்வேர்ச்சொல்லாகவேவரும்முதலெழுத்துகுறிலாகஇருக்கும்.

(எ.கா) சுடு, கெடு

ஆ. முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயர்

முதற்நிலைத்தொழிற்பெயரின்முதலெழுத்துநீண்டுவருமாயின்அது
முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயராகும்.

(எ.கா)
சுடுதல் - தொழிற்பெயர்
சுடு - முதற்நிலைத்தொழிற்பெயர்
சூடு - முதற்நிலைதிரிந்ததொழிற்பெயர்
சுடுதல் - சுடு - சூடு.

வேர்ச்சொல்லைக்கண்டறிவது

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
             வேர்ச்சொல்லைக்கண்டறிவதுஎப்படி?

பகுபதஉறுப்பிலக்கணம்படித்திருப்போம்.இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும். அப்படி மறந்திருந்தாலும் கவலைஇல்லை. வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

வேர்ச்சொல்:

ஒருசொல்லின்மூலச்சொல்எதுவோஅதுவே. அச்சொல்லின்வேர்ச்சொல்ஆகும்.

(எ.கா) பார்

'பார்' என்பது ஒரு வேர்ச்சொல். இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.

அப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?

'வந்தான்' என்பதன்வேர்ச்சொல் 'வா'.

அவ்வளவுதான். வார்த்தையைப் பார்த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.

இதைப்போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என கேள்விகள் கேட்கப்படும்.

மாதிரிவினாக்கள்:

1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

அ)சென்றஆ)சென்றுஇ) செல்ஈ)சென்றனன்

2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

அ)பேசிஆ)பேசுஇ)பேசியஈ)பேசுதல்

மேற்கண்ட வினாக்களில் விடையைக் கண்டுபிடிக்க முடிகிறதா. இல்லையெனில் எளிதாக கண்டுபிடிக்க வழி இருக்கிறது..

முதலில் கொடுத்த சொல்லை நன்றாக வாசியுங்கள். பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள். அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும் படி இருக்கிறதோ அந்தச் சொல்லே வேர்ச்சொல் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பாருங்கள். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் கட்டளைச் சொல் எது வென்றுதெரிகிறதா?

ஆமாம். முதல் வினாவிற்கு விடை 'செல்'.அச்சொல் தான் கட்டளைச் சொல்.

இரண்டாவது வினாவிற்கு விடை 'பேசு'.அச்சொல் தான் கட்டளைச் சொல்.

வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

பெயரெச்சம், வினையெச்சம்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         பெயரெச்சம், வினையெச்சம் - இலக்கண குறிப்பறிதல்


1. பெயரெச்சம்:

ஒரு வினைச் சொல்லானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.

(எ.கா) படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள்

மேற்கணடவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.

பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால். நீங்கள் முதலில் உள்ள படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவற்றை கணக்கிட்டு தான் பெயரெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்த, வந்த, சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள 'அ' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:

படித்த- இதன் கடைசி எழுத்து 'த'

'த' என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்..

இப்படி வார்த்தையின் இறுதியில் 'அ' என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம்தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

பெயரெச்சத்தின் வகைகள்:

அ.தெரிநிலைப்பெயரெச்சம் ஆ.குறிப்புப்பெயரெச்சம்
இ.எதிர்மறைப்பெயரெச்சம் ஈ.ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்
என 4 வகைப்படும்.

அ.தெரிநிலைப்பெயரெச்சம்
காலத்தை வெளிப்படையாகக் காட்டி, அச்சொல் முடியாமல் நின்று, பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப்பெயரெச்சமாகும். இது மூன்றுகாலங்களிலும் வரும்.

(எ.கா) படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்

ஆ.குறிப்புப்பெயரெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஒரு செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்புபெயரெச்சம் எனப்படுகிறது.

(எ.கா.)நல்ல பையன்
கரிய உருவம்

இ.எதிர்மறைப்பெயரெச்சம்

(எ.கா.) பாடாத பைங்கிளி
கேட்காத செவி
பேசாத பெண்

சொற்களை வாசித்தாலே எதிர்மறை என எளிதாக அறியலாம்.

ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும்.

(எ.கா.) பாடா பைங்கிளி
பொய்யா மொழி
வாடா மலர்
பேசா வாய்
சிந்தா மணி
மாறா அன்பு
செல்லா காசு
தேரா மன்னா

2. வினையெச்சம்:

தொழிலையும் காலத்தையும் உணர்த்தி வினயைக் கொண்டு முடியும் சொல் வினைச்சொல் ஆகும்.

(எ.கா) படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான்.

மேற்கணடவற்றுள் படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.

வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று வினா வரும்போது முதலில் உள்ள படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவைவினையெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்து, வந்து, சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்.

விளக்கம்:

படித்து - இதன் கடைசி எழுத்து 'து'

'து' என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்..
பாடி, ஆடி, ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் 'இ' சத்தத்தில் முடியும்.

விளக்கம்:

பாடி- இதன் கடைசி எழுத்து 'டி'

'டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.


இப்படி வார்த்தையின் இறுதியில் 'உ' மற்றும் 'இ' என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

(அ) தெரிநிலை வினையெச்சம்
(ஆ) குறிப்பு வினையெச்சம்

என வினையெச்சம் 2 வகைப்படும்.

அ.தெரிநிலை வினையெச்சம்

தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி வினைச் சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா) வந்து போனான்
நின்று வந்தான்

ஆ.குறிப்புவினையெச்சம்

குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல் பண்பின் அடிப்படையில் வினைச் சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா)மெல்ல நடந்தான்
கோபமாக பேசினான்

3. முற்றெச்சம்
ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல். வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்றுபெயர். இச்சொல் தனித்து நோக்கும் போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.
(எ.கா)
சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
படித்தனர் தேர்ந்தனர்
எழுதினன் முடித்தனன்.

வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
       வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...


* வினைத்தொகை என்றால் என்ன?

மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச் சொல்லால் தழுவப் பெற்றுவரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

வினைத்தொகையில் இருசொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

ஊறிய காய் - இறந்தகாலம்
ஊறுகின்ற காய் - நிகழ்காலம்
ஊறும் காய் - எதிர்காலம்

இப்பொழுது மூன்றுகாலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப் போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்.

(எ.கா)
1)படர்கொடி

படர்ந்த கொடி- இறந்தகாலம்
படர்கின்ற கொடி- நிகழ்காலம்
படரும் கொடி- எதிர்காலம்

2)சுடுசோறு

சுட்டசோறு - இறந்தகாலம்
சுடுகின்றசோறு - நிகழ்காலம்
சுடும்சோறு - எதிர்காலம்

3)குடிநீர்

குடித்தநீர்- இறந்தகாலம்
குடிக்கின்றநீர்- நிகழ்காலம்
குடிக்கும்நீர்- எதிர்காலம்

கொடுக்கப் பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப்பாருங்கள். முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று. ஒரு விடைமட்டும் தான் முக்காலத்தையும் உணர்த்தும். மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம். தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டுபிடிக்கலாம்.

* பண்புத்தொகைஎன்றால்என்ன?

ஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

(எ.கா) செந்தாமரை

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

கொடுக்கப்பட்ட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக.

(ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம். பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.)

'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை + தாமரை என்று பிரியும்.

'மை' விகுதி தெரிகிறதா. ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால் தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை, நீலம், வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை, தீமை, கொடுமை, பொறாமை

சுவையைக் குறிக்கும் சொற்கள்:

காரம், புளிப்பு, கசப்பு
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம், வட்டம், நாற்கரம்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப் பெயர்கள் பின்னும் நின்று இடையில் “ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா)

சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, இந்தியநாடு, தமிழ்நாடு,
மாமரம், குமரிப்பெண், வாழைமரம், தாமரைப்பூ
பொருட்செல்வம், கடல்நீர் , தைத்திங்கள், அவிஉணவு
அரவணை, செருக்களம் போன்றவை.

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும்பெயர்

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும் பெயரை எப்படி கண்டுபிடிப்பது ?

1 வினைமுற்று என்றால் என்ன?

முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

எ.கா. படித்தான்

படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்து விட்டான் என்றுபொருள்.

இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினைமுற்று.

'படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்

'படித்து' என்பது வினையெச்சம்
'படித்தான்' எனபது வினைமுற்று.

பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது. 'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது. எனவே அது வினைமுற்று.

கீழ்க் காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

அ.தெரிநிலை வினைமுற்று
ஆ.குறிப்பு வினைமுற்று
இ.ஏவல் வினைமுற்று
ஈ.வியங்கோள் வினைமுற்று
உ.உடன்பாட்டு வினைமுற்று
ஊ.எதிர்மறை வினைமுற்று

இவ்வாறாக ஒரு வினைமுற்றை 6 வகைப் படுத்திக் காணலாம்.

அ. தெரிநிலை வினைமுற்று

ஒருவினை முற்றானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படு பொருள் ஆகிய ஆறிணையும் வெளிப்படையாக உணர்த்தி வரும். ஒரு செயல் நடந்து முடிந்ததாக தெரியும்.

(எ.கா) ஓவியன் சித்திரம் தீட்டினான்.
செய்பவன் - ஓவியம்
கருவி - வர்ணம்
நிலம் - சுவர்
செயல் - தீட்டுதல்
பொருள் - சித்திரம்
காலம் - இறந்தகாலம்.

(எ.கா) எழிலரசி மாலை தொடுத்தாள்.
செய்பவள் - எழிலரசி
கருவி - நார், கை
நிலம் - இருப்பிடம்
செயல் - தொடுத்தல்
பொருள் - மாலை
காலம் - இறந்தகாலம்.

ஆ.குறிப்பு வினைமுற்று

திணை, பால் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும்
குறிப்பாக உணர்த்தி வரும் வினைக்குறிப்பே குறிப்பு வினைமுற்று எனப்படும். இது காலத்தை (வெளிப்படையாக) காட்டாது.

(எ.கா) வளவன் தற்போது பொன்னன்.
செங்கண்ணன் கரியன்
பாலன் இன்று செல்வன்

பொன்னன் - பொருள்
மதுரையான், குற்றாலத்தான் - இடம்
ஆதிரையான் - காலம்
செங்கண்ணன் - சினை
இனியன், கரியன் - பண்பு (அ) குணம்
நடிகன், நடையன் - தொழில்

இவ்வாறாக பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றைச் சார்ந்தே குறிப்பு வினைமுற்று அமையும்.

இ. ஏவல்வினைமுற்று

முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும். இது எதிர்காலத்தைக் காட்டிவரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.

1.ஏவல் ஒருமை வினைமுற்று

(எ.கா) நீநட, நீசெய், நீபோ, நீபடி

2. ஏவல் பன்மை வினைமுற்று
(எ.கா) நீர்உண்குவீர் , நீர்வாரீர், நீர்செய்குதும்

ஈ. வியங்கோள் வினைமுற்று.
க - இய - இயர் என்ற விகுதிகளைப் பெற்று வரும்.
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக் கொடல் ஆகிய பொருள்களில் வரும். இது மூன்று இடங்களையும் ஐம்பால் உணர்த்தி வரும்.

(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர், வாழ்த்துதல்
ஒழிக, கெடுக, வைதல், செல்க
வருக, ஈக, விதித்தல், தருக
வேண்டல், சிரிக்க, பார்க்க

உ. உடன்பாட்டு வினைமுற்று

(எ.கா) செய்வார், வாழ்வார், துறப்பார்

ஊ. எதிர்மறை வினைமுற்று

(எ.கா) செய்யார், வாழாதவர், துறவார்

2. வினையாலணையும்பெயர்:

ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(எ.கா) படித்தவன்,
கண்டவர்
சென்றனன்

எப்படி எளிதில் கண்டறிவது?:

கொடுக்கப் பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர், அவன், அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு கொள்க.

(எ.கா)

'காட்சியவர்' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.

அ) காலப்பெயர் ஆ)இடப்பெயர் இ)வினையாலணையும்பெயர் ஈ) பண்புப்பெயர்

காட்சியவர் என்றசொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்.

உருவகம், உவமைத்தொகை

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
        உருவகம், உவமைத்தொகை என்றால் என்ன ?


உவமைத்தொகை
****************
பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற, போல, அன்ன, நிகர, போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..

(எ.கா) கனிவாய்
மலரடி

'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
அதேபோல 'மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும். இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.

பெரும்பாலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வரும் படியே வினாக்கள் அமையும்.

எ.கா

1.மலர்முகம்
2.மலர்விழி
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.கயல்விழி
6.அன்னைத்தமிழ்

மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.

உருவகம்
*********
உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்கள் என்றால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச் சுலபம்.

அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.

அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.

'மலரடி' என்றசொல்லை 'அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.

விளக்கம்:

ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கிறீர்கள். உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள். இதுவே 'மலர்முகம்' இது உவமைத்தொகை.

இன்னும் ஒருபடி மேலேபோய், மலரைப் போன்று முகமில்லை. இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம் அதாவது முகமலர்.

இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா?

எடுத்துக்காட்டு:

உவமைத்தொகை - உருவகம
மலர்முகம் - முகமலர்
மலர்க்கை - கைமலர்
தாய்மொழி - மொழித்தாய்
கயல்விழி - விழிகயல்
அன்னைத்தமிழ் - தமிழன்னை
மலர்விழி - விழிமலர் .

இரட்டைக்கிளவி , அடுக்குத்தொடர் மற்றும் ஒருபொருட்பன்மொழி

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
           இரட்டைக்கிளவி , அடுக்குத்தொடர் மற்றும் ஒருபொருட்பன்மொழி

இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் மற்றும் ஒரு பொருட்பன்மொழி போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைக் காணலாம்.

இரட்டைக்கிளவி

ஒரு சொல் தொடர்ந்து இரண்டு முறைவரும். ஆனால் தனித் தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத் தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

(எ.கா)

சலசல, கலகல

மேற்கண்ட வார்த்தைகளை சல, கல என பிரித்தால் பொருளைத்தராது. எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.

அடுக்குத்தொடர்

ஒரு சொல் தொடர்ந்து இரண்டு முறை வரும். ஆனால் தனித் தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத் தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.

(எ.கா)

பாம்பு பாம்பு, வருக வருக

மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு, வருக என பிரித்தால் பொருளைத் தரும். எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.

ஒரு பொருட்பன்மொழி

ஒரு பொருளின் சிறப்பிற்காக அப்பொருளைக் குறிக்க பல சொற்கள் வருவது ஒரு பொருட்பன்மொழி ஆகும்.

(எ.கா) ஓங்கி உயர்ந்த
ஒரு தனி
தொழுது வணங்கினான்
காத்து ஓம்பினான

எண்ணும்மை, உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
எண்ணும்மை, உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
*********************************************


உம்மைத்தொகை, எண்ணும்மை, உரிச்சொற்றொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது?

எண்ணும்மை
*************
கொடுக்கப் பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(எ.கா)

அல்லும் பகலும்
காதலும் கற்பும்
அவனும் இவனும்

சிறப்பு எண்ணும்மை

சொற்கள் “உடனும்” என முடியும்.

(எ.கா) வானுடனும், கடவுளுடனும்

உயர்வு சிறப்பும்மை

சொற்கள் “னினும்” என்று முடியும்.

(எ.கா) வானினும், ஊனினும், தேனினும

உம்மைத்தொகை
***************

கொடுக்கப் பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

(எ.கா)

அவன் இவன்
இரவு பகல்
இராப் பகல்

எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும். அதுவே மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

உரிச்சொற்றொடர்
****************
ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

(எ.கா)

மாநகரம்

அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம். இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.

கீழே கொடுக்கப் பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்.
1.சால
2.உறு
3.தவ
4.நனி
5.கூர்
6.கழி
7.கடி
8.மா
9.தட

மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக் கூடிய சொற்கள். எனவே கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் தான் ஆரம்பிக்கும்..

(எ.கா)

தடக்கை
தவப்பயன்
உறுபடை

அன்மொழித் தொகை
*******************
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை ஆகிய ஐந்து தொகைகளும் தொடருக்கு புறத்தே அமையாமல் மறைந்திருந்து பொருள் தருமாயின் அது அன்மொழித்தொகை யாகும்.

(எ.கா) பொற்றொடி வந்தாள். பூங்குழலி வந்தாள், சேயிழைக் கணவன் தேன்மொழி நகைத்தாள், இன்மொழி சொன்னான் சுடுகதிர் எழுந்தான்.

வேற்றுமைத் தொகை - இலக்கணம் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வேற்றுமைத்தொகை
*******************
இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வர சொற்கள் நிற்பது வேற்றுமைத்தொகை ஆகும். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

வேற்றுமை உருபுகள் 8 வகைப்படும்

1 -உருபுஇல்லை
2 -ஐ
3 -ஆல்
4 -கு
5 -இன்
6 -அது
7 -கண்
8 -உருபுஇல்லை

மேற்கண்ட உருபுகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

1.முதலாம் வேற்றுமைத்தொகை
*****************************
பொருளின் இயல்பான பெயரே முதல்வேற்றுமைதொகை. இதற்கு உருபு இல்லை.

இதன் வேறு பெயர்கள்

அ. எழுவாய் வேற்றுமை
ஆ. பெயர் வேற்றுமை

(எ.கா) கந்தன் வந்தான்
ராமன் வந்தான்

2.இரண்டாம் வேற்றுமைத்தொகை (ஐ)
**********************************
பால் குடித்தான் - பாலைக் குடித்தான்

( மறைந்த உருபு “ஐ” )

மொழி கற்றான் - மொழி + ஐ + கற்றான்
சிலை செய்தான் - சிலை + ஐ + செய்தான்.
காளை போன்றவன் - காளை + ஐ + போன்றவன்
இல்லறம் துறந்தான் - இல்லறம் + ஐ + துறந்தான்
கோயில்கட்டினான் - கோயில் + ஐ + கட்டினான்.

இவ்வாறாக “ஐ” என்ற உருபு மறைந்து காணப்படும்.

3.மூன்றாம் வேற்றுமைத்தொகை (ஆல்) - (ஓடு)
*****************************************

(எ.கா)

பேனா எழுதினான்
(ஆல்) - பேனாவால் எழுதினான்

தலையால் வணங்கினான்
மரம்வாளால் அறுபட்டது
புலவரால் பாடப்பட்டபாட்டு

(ஓடு) கடிதம் பணம் வந்தது - கடிதத்தோடு பணம் வந்தது
தாய் தந்தை வந்தார் - தாயோடு தந்தை வந்தார்

4.நான்காம் வேற்றுமைத்தொகை (கு)
********************************
(எ.கா)

நோய் மருந்து - நோய்க்கு மருந்து
மயில் போர்வை கொடுத்தான் - மயிலுக்கு போர்வை கொடுத்தான்
மான் பகை புலி - மானுக்கு பகை புலி

5.ஐந்தாம் வேற்றுமைத்தொகை (இன்) - (இல்)
***************************************
(எ.கா)

பழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை
தமிழ்நாடு வடவெல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வட வெல்லை திருவேங்கடம்
கொடை சிறந்தவன் குமரன் - கொடையில் சிறந்தவன் குமரன்

6.ஆறாம் வேற்றுமைதொகை (அது)
*******************************
(எ.கா)

கபிலர் பாட்டு - கபிலரது பாட்டு
கண் பார்வை - கண்ணினது பார்வை
வினைப் பயன் - வினையினது பயன்
மலையுச்சி - மலையினது உச்சி
என் கை - எனது கை
கந்தன் வீடு - கந்தனது வீடு
மலர் நீட்டம் - மலரினது நீட்டம்
மலை உச்சி - மலையினது உச்சி

7.ஏழாம் வேற்றுமைத்தொகை (கண்)
*******************************
(எ.கா)

பால் சுவை - பாலின்கண் சுவை
மலை மூலிகை - மலையின்கண் மூலிகை
கிளை பறவை - கிளையின்கண் பறவை

8.எட்டாம் வேற்றுமைத்தொகை
***************************
இதன் வேறு பெயர் விளிவேற்றுமை. இதற்கு உருபு இல்லை. பெயர்ச்சொல்லின் ஈடுகெடுதல், மிகுதல், திரிதல் போன்றவை எட்டாம் வேற்றுமைத்தொகை ஆகும்.

(எ.கா) ராமன் - ராமனே
கந்தன் - கந்தனே

வேர்ச் சொல் - தமிழ் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று, வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல் எப்படி ?

வேர்ச் சொல்லைக் காண் என வினாக்களைக் கேட்பது போல வேர்ச் சொல்லைக் கொடுத்து இதன் வினைமுற்றை கண்டுபிடி அல்லது வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி என்பதைப் போல வினாக்கள் அமையும்.

(எ.கா)

'படி' என்ற சொல்லின் தொழிற் பெயரைக் கண்டுபிடி

அ) படித்த ஆ) படித்து இ) படித்தவன் ஈ) படித்தல்

விடை: ஈ. படித்தல்

'தல்' எனும் விகுதி வந்தால் தொழிற்பெயர்.

படித்த என்ற சொல்லின் விகுதி 'அ' என்பதால் அதுபெயரெச்சம்.

படித்து என்ற சொல்லின் விகுதி 'உ' என்பதால் அது வினையெச்சம்.

படித்தவன் என்றசொல் வினையாலணையும் பெயர்.

கீழே அட்டவணை பாருங்கள். அதைப்போல நீங்களும் அட்டவணை தயாரித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

வேர்ச்சொல் - பெயரெச்சம் - வினையெச்சம் - வினையாலணையும் பெயர் - வினைமுற்று - தொழிற்பெயர்

தா - தந்த - தந்து - தந்தவன் - தந்தான் - தருதல்

செல் - சென்ற - சென்று - சென்றவன் - சென்றான் - செல்தல்

உண் - உண்ட - உண்டு - உண்டவன் - உண்டான் - உண்ணல்

காண் - கண்ட - கண்டு - கண்டவன் - கண்டான் - காணுதல்

கூறு- கூறிய - கூறி - கூறியவன் - கூறினான் - கூறுதல்

அளபெடை -இலக்கணம் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

  அளபெடை

ஓர் செய்யுளில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.

அ.உயிரளபெடை
ஆ.ஒற்றளபெடை

1.உயிரளபெடை
**************
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது உயிரளபெடை யாகும்.

செய்யுளிசையளபெடை (அ)
இன்னிசையளபெடை (உ)
சொல்லியைளபெடை (இ)

என இது 3 வகைப்படும்.

செய்யுளிசையளபெடை (அ)
------------------------------------------
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறுபெயர் இசை நிறையளபெடை.

(எ.கா) தொழாஅர்
உழாஅர்
நல்லபடாஅ
ஆதூம்(ஆஅதூம்)
ஓஓதல்
நடுவொரீஇ
தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்

சொல்லிசையளபெடை (இ)
-------------------------------------
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச் சொல்லை வினையெச்சசொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை என்பதாகும்.

(எ.கா) குடிதழீஇ
அடிதழீஇ
உரனசைஇ

இன்னிசையளபெடை (உ)
-----------------------------------
செய்யுளில் ஓசை குறையாத போதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்

(எ.கா) உண்பதூஉம்
கொடுப்பதூஉம்
உடுப்பதூஉம்

2.ஒற்றளபெடை
**************
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும். இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.

(எ.கா) கண்ண்கருவினை
கலங்ங்குநெஞ்சமில்லை
இலஃஃகுமுத்தின்
மடங்ங்கலந்த.

தமிழ் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் அறிவு - அறிந்து வைத்துக் கொள்வோம்...
--------------------------------------------------------------------------------------------------------------
மூவண்ணம்- காவி, வெண்மை, பச்சை
--------------------------------------------------------------------------------------------------------------
மூவேந்தர்கள்- சேரன், சோழன், பாண்டியன்
-------------------------------------------------------------------------------------------------------------
முக்கனி- மா, பலா, வாழை
-------------------------------------------------------------------------------------------------------------
முத்தமிழ்- இயல், இசை, நாடகம்
-------------------------------------------------------------------------------------------------------------
முப்பால்- அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலம்- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
------------------------------------------------------------------------------------------------------------
முந்நீர்- ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
-------------------------------------------------------------------------------------------------------------
மூன்றுமுரசு - கொடைமுரசு, படைமுரசு, மங்களமுரசு
------------------------------------------------------------------------------------------------------------
முச்சங்கம்- முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
------------------------------------------------------------------------------------------------------------
மூவிடம்- தன்மை, முன்னிலை, படர்க்கை
-------------------------------------------------------------------------------------------------------------
நாற்திசை- கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
--------------------------------------------------------------------------------------------------------------
நாற்பால்- அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
------------------------------------------------------------------------------------------------------------
நால்வகைஉணவு - உண்ணல், தின்னல், பருகல், நக்கல்
-------------------------------------------------------------------------------------------------------------
நால்வகைசொல்- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
----------------------------------------------------------------------------------------------------------------
நான்மறை- ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்
--------------------------------------------------------------------------------------------------------------
நான்குகுணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------
நாற்படை- தேர், யானை, குதிரை, காலாட்படை.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவகை- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
---------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி.
---------------------------------------------------------------------------------------------------------------
ஐஞ்சிறுங்காப்பியங்கள்- சூளாமணி, நீலகேசி, யசோதரகாவியம்,
நாககுமாரகாவியம், உதயணகுமாரகாவியம்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திலக்கணம்- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தொகை- முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
-----------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பால்- ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெரும்பொருள்- நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பொறி- மெய், வாய், கண், மூக்கு, செவி
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்புலன்- ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
---------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திணை- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
--------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்குழு- சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
----------------------------------------------------------------------------------------------------------------
அறுசுவை- இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
பெரும்பொழுது- கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பணி,
இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
---------------------------------------------------------------------------------------------------------------
சிறுபொழுது- காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
---------------------------------------------------------------------------------------------------------------
ஏழிசை- குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
பெண்களின்ஏழுபருவங்கள்- பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண்
---------------------------------------------------------------------------------------------------------------
எட்டுத்தொகை- நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
--------------------------------------------------------------------------------------------------------------
நவரத்தினங்கள்- மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்,
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்
---------------------------------------------------------------------------------------------------------------
நவதானியங்கள்- நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை,
கடலை, கொள்ளு, கோதுமை
-------------------------------------------------------------------------------------------------------------
ஆண்பால்பிள்ளைத்தமிழ்பருவங்கள் 10
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,
அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெண்பால்பிள்ளைத்தமிழ்பருவங்கள் 10
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,
அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்
--------------------------------------------------------------------------------------------------------------
பத்துப்பாட்டு- திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
கூத்தராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை.
--------------------------------------------------------------------------------------------------------------
பதிணென்கீழ்க்கணக்குநூல்கள்-
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது,
இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை,
பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள்,
முதுமொழிக்காஞ்சி, ஐந்தினைஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலை
நூற்றைம்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, கைந்நிலை.
--------------------------------------------------------------------------------------------------------------
புறத்திணை- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,
தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை

மரபுப்பிழைச்சொற்கள், வழூஉச்சொற்களும்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
மரபுப்பிழைச்சொற்கள், வழூஉச்சொற்களும் மற்றும் வேற்றுமொழிச்சொல்

1. மரபுப்பிழைச்சொற்கள்
**********************

பறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்

பறவைகள் ------ விலங்குகள்

ஆந்தை - அலறும் ------ நாய் - குரைக்கும்
கோழி - கொக்கரிக்கும் ------ நரி - ஊளையிடும்
குயில் - கூவும் ------ குதிரைகனைக்கும்
காகம் - கரையும் ------ கழுதை - கத்தும்
கிளி - கொஞ்சும் ------ பன்றி - உறுமும்
மயில் - அகவும் ------ சிங்கம் - முழங்கும்
கோட்டான் - குழலும் ------ பசு - கதறும்
வாத்து - கத்தும் ------ எருது - எக்காளமிடும்
வானம்பாடி - பாடும் ------ எலி - கீச்சிடும்
குருவி - கீச்சிடும் ------ தவளை - கத்தும்
வண்டு - முரலும் ------ குரங்கு - அலம்பும்
சேவல் - கூவும் ------ பாம்பு - சீறிடும்
கூகை - குழலும் ------ யானை - பிளிரும்
புறா - குனுகும் ------ பல்லி - சொல்லும்
------------------------------------------------------------------------------------------------------------
பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்

புலிப்பரள் ------ சிங்கக்குருளை
பூனைக்குட்டி ------ எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி ------ கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி ------ கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி ------ மான்கன்று
ஆட்டுக்குட்டி ------ யானைக்கன்று
பன்றிக்குட்டி
----------------------------------------------------------------------------------------------------------
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

சோளத்தட்டு ------ முருங்கைக்கீரை
தாழைமடல் ------ தென்னங்கீற்று
வாழையிலை ------ பனையோலை
வேப்பந்தழை ------ மாவிலை
மூங்கில்இலை ------ நெல்தாள்
-------------------------------------------------------------------------------------------------------------
செடி, கொடி மரங்களின் தொகுப்பு

பூந்தோட்டம் ------ மாந்தோப்பு ------ வாழைத்தோட்டம் ------ தேயிலைத்தோட்டம் சோளக்கொல்லை ------ சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு ------ பனங்காடு வேலங்காடு
---------------------------------------------------------------------------------------------------------------
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்

ஆடு - மந்தை ------ மாடு - மந்தை
எறும்பு - சாரை ------ கல் - குவியல்
சாவி - கொத்து ------ திராட்சை - குலை
பசு - நிரை ------ யானை - கூட்டம்
வீரர் - படை ------ வைக்கோல்- போர்
விறகு - கட்டு ------ மக்கள் - தொகுப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
2. வழுஉச்சொற்கள்
*******************
வழுஉச்சொல் ------ தமிழ்சொல்
உசிர் ------- உயிர் ஊரளி ------- ஊருளி
ஒருத்தன் ------- ஒருவன் கடகால் ------- கடைக்கால்
குடக்கூலி ------- குடிக்கூலி முயற்சித்தார் ------- முயன்றார்
வண்ணத்திப்பூச்சி ------- வண்ணத்துப்பூச்சி வென்னீர் ------- வெந்நீர்
எண்ணை ------- எணணெய் சிகப்பு ------- சிவப்பு
தாவாரம் ------- தாழ்வாரம் புண்ணாக்கு ------- பிண்ணாக்கு
கோர்வை ------- கோவை வலதுபக்கம் ------- வலப்பக்கம்
பேரன் ------- பெயரன் பேத்தி ------- பெயர்த்தி
தலகாணி ------- தலையணை வேர்வை ------- வியர்வை
சீயக்காய் ------- சிகைக்காய்
சுவற்றில் ------- சுவரில்
இருபல் ------- இருமல் அருவாமனை ------- அரிவாள்மனை
அண்ணாக்கவுரு ------- அரைநாண்கயிறு புஞ்சை ------- புன்செய்
புண்ணாக்கு ------- பிண்ணாக்கு
நாத்தம் ------- நாற்றம்
பதனி ------- பதிநீர் அருகாமை ------- அருகில்
வெங்கலம் ------- வெண்கலம் பேட்டி ------- நேர்காணல்
வெண்ணை ------- வெண்ணெய் ஒத்தடம் ------- ஒற்றடம்
தேனீர் ------- தேநீர்
கவுறு ------- கயிறு
பயிறு ------- பயறு பாவக்காய் ------- பாகற்காய்
ரொம்ப ------- நிரம்ப கோடாலி ------- கோடாரி
கடப்பாறை ------- கடப்பாரை ஆம்பளை ------- ஆண்பிள்ளை
ஈர்கோலி ------- ஈர்கொல்லி அவரக்கா ------- அவரைக்காய்
---------------------------------------------------------------------------------------------------------------
3. வேற்றுமொழிச்சொற்கள்
************************

வேற்றுமொழிச்சொல் -------- தமிழ்ச்சொல்
பஜனை -------- கூட்டுவழிபாடு
வைத்தியர் -------- மருத்துவர்
ஜனம் -------- மக்கள்
கர்வம் -------- செருக்கு
வாபாஸ் -------- திரும்பபெறுதல்
தபால் -------- அஞ்சல்
கிஸ்தி -------- வரி
அலமாரி -------- நெடும்பேழை
முண்டாசு -------- தலைப்பாகை
சிம்மாசனம் -------- அரியணை
அகங்காரம் -------- ஆணவம்
பஜார் -------- கடைத்தெரு
சாதம் -------- சோறு
சபை -------- அவை
நாஷ்டா -------- சிற்றுண்டி
ஆசீர்வாதம் -------- வாழ்த்து
நமஸ்காரம் -------- வணக்கம்
லாபம் -------- ஈவு
இஷ்டம் -------- விருப்பம்
வக்கீல் -------- வழக்குரைஞர்
தராசு -------- துலாக்கோல்
ஹாஸ்டல் -------- விடுதி
சர்க்கார் -------- அரசு
கேப்பை -------- கேழ்வரகு
ஐதீகம் -------- சடங்கு
வேதம் -------- மறை
ஜானவாசம் -------- மாப்பிளைஅழைப்பு
அபிஷேகம் -------- திருமுழுக்கு
யாத்திரை -------- புனிதப்பயணம்
ஆயுள் -------- வாழ்நாள்
தீர்த்தம் -------- புனிதநீர்
ஜனநாயகம் -------- குடியாட்சி
நதி -------- ஆறு
சந்தா -------- கட்டணம்
பிரதிநிதி -------- சார்பாளர்
பத்திரம் -------- ஆவணம்
மத்தியாணம் -------- நண்பகல்
சிபாரிசு -------- பரிந்துரை
பரீட்சை -------- தேர்வு
பிரார்த்தனை -------- தொழுகை
சென்ட்ரல்கவர்ன்மெண்ட் -------- நடுவண்அரசு
தாலுகாஆபிஸ் -------- வட்டாட்சியர்அலுவலகம்

வாக்கிய வகைகள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வீராமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வாக்கிய வகை அறிதல்
********************

சில வாக்கிய வகைகளும் அவற்றின் விளக்கமும்.

1. தனி வாக்கியம்

ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால்அது தனி வாக்கியம்.

(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்
சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்

2. தொடர் வாக்கியம்

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும். ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும். தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால், அதனால் எனும் இணைப்புச் சொற்கள் வெளிப்படையாக வரும். பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

(எ.கா) ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை வழிபட்டான்.
நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது.

3. கலவை வாக்கியம் :

ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்

‘ஓ’ ‘என்று’ ‘ஆல்’ என்ற இணைப்புச் சொற்கள் வரும்.

(எ.கா) மேகம் கருத்ததால் மழை பெருகியது.
யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர்.
நாங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

4.கட்டளை வாக்கியம்

பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருமாயின் அது கட்டளை வாக்கியம். இதில் இறுதிச் சொல் வேர்ச் சொல்லாக
வரும்.

(எ.கா) அறம் செய்.
தண்ணீர் கொண்டு வா.
இளமையில் கல்.

5. வினா வாக்கியம்

வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.

வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யாஆகும்.

(எ.கா) இது சென்னைக்கு செல்லும் வழியா?
நீ மனிதனா? - ஆ
நீதானே? - ஏ
உளரோ? - ஓ

6.உணர்ச்சி வாக்கியம்

மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு வாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்

(எ.கா) ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!
ஐயகோ! நேருஜி மறைந்தாரே!

7. செய்தி வாக்கியம்

ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்தி வாக்கியம்

(எ.கா) உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது
மாணவர்கள் சீருடையில் வரவேண்டும்

8. வியங்கோள் வாக்கியம்
கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல், ஆகியவற்றுடன் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியமே வியங்கோள்வாக்கியம்

(எ.கா) தமிழை முறையாகப் படி - கட்டளை
நீடுழிவாழ் - வாழ்த்துதல்
தீயெனஒழி - வைதல்
நல்ல கருத்தினை நாளும்கேள் - வேண்டுகோள்

9.எதிர்மறை வாக்கியம்

ஒருசெயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது எதிர்மறை வாக்கியம் ஆகும்.

(எ.கா) அவன் கல்வி கற்றிலன் உடன்பாடு ----- எதிர்மறை அவன் சென்றான் ----- அவன் சென்றிலன்
ஆமைகள் வேகமாக ஓடும் ----- ஆமைகள் வேகமாக ஓடா
புலி புல்லைத் தின்னும் ----- புலி புல்லைத் தின்னா
மொழி இலக்கிய வளம் உடையது ----- மொழி இலக்கிய வளம் அற்றது

10. உடன்பாட்டு வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.

(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன
வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

11.நேர்க்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.

(எ.கா) வளவன், "நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.

12.அயற்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னான் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற் கூற்று வாக்கியம் ஆகும்.

(எ.கா) வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை போன்றவை அறிதல்.

1. தன்வினை வாக்கியம்

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.

(எ.கா) செல்வி பாடம் கற்றாள்.

முருகன் திருந்தினான்

2.பிறவினை வாக்கியம்

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.

‘பித்து’ ‘வித்து’ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) ஆசிரியை பாடம் கற்பித்தார்
அவன் திருத்தினான்

தன்வினை ------- பிறவினை
திருந்தினான் ------- திருத்தினான்
உருண்டான் ------- உருட்டினான்
பயின்றான் ------- பயிற்றுவித்தான்
பெருகு ------- பெருக்கு
செய் ------- செய்வி
வாடு ------- வாட்டு
நடந்தான் ------- நடத்தினான்
சேர்கிறேன் ------- சேர்க்கிறேன்
ஆடினாள் ------- ஆட்டுவித்தாள்
பாடினான் ------- பாடுவித்தான்
கற்றார் ------- கற்பித்தார்
தேடினான் ------- தேடுவித்தான்
உண்டாள் ------- உண்பித்தாள்
அடங்குவது ------- அடக்குவது

3.செய்வினை வாக்கியம்

ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.

(எ.கா) பாரதியார் குயில் பாட்டைப் பாடினார்.
தச்சன் நாற்காலியைச் செய்தான்
அவள் மாலையைத் தொடுத்தாள்
ராதா பொம்மையைச் செய்தாள்

4.செயப்பாட்டு வினை வாக்கியம்

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
(செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)

தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..


விடாமுயற்சி
************

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln.

வெற்றியாளர்
************

வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த
முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
- Napoleon Hill.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers.

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
- George Bernard Shaw.

வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்

தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

எதிர்ச்சொல்


மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.அனைவரையும் வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறோம்.
எதிர்ச்சொல்
***********

மருவுக * ஒருவுக கடுவன் * மந்தி
மேதை * பேதை அருகே * தொலைவு
தன்மை * வெம்மை ஆடுஉ * மகடுஉ
மன்னிப்பு * ஒறுப்பு ஆகாது *போகாது
அருகு * பெருகு இன்சொல் * வன்சொல்
அண்மை * சேய்மை இயன்ற * இயலாத
முனிவு * கணிவு பகட
்டு * எளிமை
வழுத்தல் * இகழ்தல் தொண்மை * புதுமை
வளர்ச்சி * தளர்ச்சி ஆதி * அந்தம்
அருள் * மருள் இன்சொல் * வனசொல்
பனையளவு * திணையளவு நஞ்சு * அமிர்தம்
ஆழ * மிதப்ப குடியரசு * முடியரசு
எந்தை * நொந்தை அமைதி * குழப்பம்
மருள் * தெருள் மலர்தல் * கூம்புதல்
தொகுத்து * பகுத்து இறுக்கம் * தளர்வு
நல்லார் * அல்லார் சுருக்கம் * விரிவு
தளிர் * சருகு ஓடுமீன் * உறுமீன்
ஆண்டான் * அடிமை மேலை * கீழை
சொந்தம் * அந்நியம் வளர்ந்து * தளர்ந்து
இழப்பு * ஆதாயம் இடும்பை * இன்பம்
பண்புடை * பண்பிலா மூதேவி * சீதேவி
களிப்பு * துயரம் வடமொழி * தென்மொழி
தமயன் * தமக்கை பழமொழி * புதுமொழி
இம்மை * மறுமை தனிமை * குழு

எதுகை, மோனை, இயைபு


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். வீரமாமுனிவரை நினைவில் போற்றும்விதமாக வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல்
***********************************************
அடி மோனை

அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.

(எ.கா) ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

இணைமோனை 1, 2

ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணைமோனை ஆகும்.

(எ.கா) “இறந்தார் இறந்தாரனையர் சினத்தை”

பொழிப்பு மோனை 1, 3

ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு மோனை ஆகும்.
(எ.கா) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஓரூஉ மோனை 1, 4

ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஓரூஉ மோனை ஆகும்.

(எ.கா) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

கூழை மோனை 1, 2, 3

ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் மோனை கூழை மோனை ஆகும்.

(எ.கா) “கல்விக்கரையில கற்பவர் நாற்சில”

கீழ்க்கதுவாய் மோனை 1, 2, 4

ஓரடியில் முதல்சீர், இரண்டாம்சீர், நான்காம்சீர் போன்றவற்றில் வரும் மோனை கீழ்க்கதுவாய் மோனை ஆகும்.

(எ.கா) “அற்றார் அழிபசிதீர்த்தல் அஃதொருவன்”

மேற்கதுவாய் மோனை 1, 3, 4

ஓரடியில் ஒன்று, மூன்று, நான்காம் சீர்களில் வரும் மோனை மேற்கதுவாய் மோனை ஆகும்.

(எ.கா) “வானின்று உலகம் வழங்கி வருதலால்”

முற்று மோனை

ஓரடியில் நான்கு சீர்களிலும் வரும் மோனை முற்று மோனை

(எ.கா) கற்க கசடற கற்பவை கற்றபின்

அடி எதுகை

அடி தோறும் முதல் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை ஆகும்.

(எ.கா.)பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கு
ஏழையினைக் கண்டனம் எனமே”

இணை எதுகை 1, 2

ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் எதுகை இணை எதுகை ஆகும்

(எ.கா) “இன்மையுள் இன்மை விருந்தொறால்”

பொழிப்புஎதுகை 1, 3

ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் எதுகை பொழிப்பு எதுகை ஆகும்.
(எ.கா) “தோன்றின் புகலோடு தோன்றுக”

ஒரூஉ எதுகை 1.4

ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் எதுகை ஓரூஉ எதுகை ஆகும்.

(எ.கா) “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்”

கூழைஎதுகை 1, 2, 3

ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.

(எ.கா) “பற்றுக பற்றற்றான் பற்றிணை”

கீழ்க்கதுவாய் எதுகை 1, 2, 4

ஓரடியில் முதலாம் இரண்டாம், நான்காம் சீர்களிலும் வரும் எதுகை கீழ்க்கதுவாய் எதுகை ஆகும்.

(எ.கா) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

மேற்கதுவாய் எதுகை 1, 3, 4
ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்களில் வரும் எதுகை மேற்கதுவாய் எதுகை ஆகும்.

(எ.கா) “கற்கக சடற கற்பவை கற்றபின்”

முற்று எதுகை 1, 2, 3, 4

ஓரடியில் நான்கு சீர்களிலும் எதுகை வந்தால் அது முற்று எதுகை ஆகும்.

(எ.கா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

இயைபுத்தொடை

ஒரு செய்யுளின், அடிகளிலும் சீர்களிலும் அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடையாகும்.

(எ.கா) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

. நன்றி