புதன், 25 பிப்ரவரி, 2015

.புளியோதரை செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கம் வாங்க.......புளியோதரை செய்யலாம் வாங்க..
 தேவையான பொருட்கள் அரிசி 400கிராம்,புளி எலுமிச்சை அளவு,மிளகாய் வற்றல் பத்து,நல்லெண்ணெய் நூறுகிராம்,முந்திரிப்பருப்பு அல்லது நிலக்கடலை இருபது கிராம்,கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன்,மல்லித்தூள் இரண்டுஸ்பூன்,கறிவேப்பிலை,உப்பு,கடுகு,உளுந்து,பெருங்காயம் தேவையான அளவு,
செய்முறை
 சோற்றை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் காய்ந்தபிறகு கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து,கடலைப்பருப்பு வறுத்து இத்துடன் பெருங்காயத்தையும் போடவும்.மிளகாயை இரண்டிரண்டாக கிள்ளிப்போட்டு பொன்னிறமாக வறுத்தபிறகு புளியை கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும்.மல்லித்தூள் சேர்த்து தேவையானஅளவு உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் மேலாக வரும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.அடுப்பிலிருந்து திறக்கும்போது கறிவேப்பிலையை போடவும்.முந்திரி அல்லது நிலக்கடலையை தனியே வறுத்து சோற்றில் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிய பிறகு புளிக்காய்ச்சலையும் சேர்த்து சோற்றை நன்கு கிளறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக