புதன், 25 பிப்ரவரி, 2015

எலுமிச்சை சோறு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு வாங்க..எலுமிச்சை சோறு செய்யலாம் வாங்க...
 அரிசி 400கிராம்,எலுமிச்சை பழம் 2,பச்சைமிளகாய்10,கடுகு ஒரு ஸ்பூன்,உளுந்து ஒரு ஸ்பூன்,கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன்,வெந்தயம் கால் ஸ்பூன்,பெருங்காயம் சிறிதளவு,முந்திரி ஐம்பது கிராம்,அல்லது நிலக்கடலை சேர்க்கலாம்.கறிவேப்பிலை,மஞ்சள்தூள்,எண்ணெய்,உப்பு தேவையான அளவு 
செய்முறை;
 முதலில் சோற்றை உதிரியாக வருமாறு குக்கரில் வழக்கமாக ஊற்றும் தண்ணீரீல் அரைப்பங்கு குறைத்து ஊற்றி சாதமாக வேகவைத்துக்கொள்ளவும். எலுமிச்சைப்பழத்தை கசப்பில்லாமல் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்துக்கொள்ளவும்,வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு,உளுந்து,வெந்தயம் தாளித்து எலுமிச்சைச்சாற்றில் சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அதில் முந்திரிப்பருப்பை சேர்த்து அளவாக வறுத்து சோற்றில்கொட்டிக் கலக்கி இத்துடன் எலுமிச்சைச்சாற்றுக்கலவையையும் சேர்த்து சோற்றை கரண்டியால் நன்கு கிளறி விடவும்.கவனி கடலைப்பருப்பையும் ,முந்திரியையும் எலுமிச்சைச்சாற்றில் சேர்த்தால் புளிப்பு ஏறிவிடும். அதனால்தான் தனியாக வறுத்துக்கொள்ள கூறியுள்ளேன். 
எலுமிச்சை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை,மிளகாய்,பூண்டு,உப்பு வைத்து அரைத்த துவையல் சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக