புதன், 25 பிப்ரவரி, 2015

தக்காளிச் சோறு செய்யலாம் வாங்க

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு வாங்க..தக்காளிச் சோறு செய்யலாம் வாங்க...
 தேவையான பொருட்கள்
 அரிச 400கிராம்,தக்காளி கால் கிலோ கிராம்,நாட்டுத்தக்காளி சேர்த்தால் புளிப்பு அதிகமாக இருக்கும்.பெரிய வெங்காயம் ஒன்று,பச்சை மிளகாய் நான்கு,மிளகாய்த்தூள் இரண்டு  ஸ்பூன்,மஞ்சள் தூள் கால் ஸ்பூன்,கொத்துமல்லித்தூள் ஒரு ஸ்பூன்,தாளிக்க எண்ணெய் கடுகு,உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலை,உப்பு தேவையான அளவு 
செய்முறை
 சோற்றை குழைந்துவிடாமல் வேகவைத்துக்கொள்ளவும்,தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வெங்காயத்தை நீளமாக பொடியாக  நறுக்கிவைத்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,தாளித்து அத்துடன் தக்காளி,வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு சுருள வதக்கிக்கொள்ளவும்,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை நீங்கியபிறகு இறக்கிவைத்து சோற்றுடன் கலந்து அத்துடன் கறிவேப்பிலையை பச்சையாக சேர்த்துக்கிளறவும்.தொட்டுக்கொள்ள வெங்காயத்தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக