புதன், 25 பிப்ரவரி, 2015

துவரம் பருப்புச் சோறு

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். துவரம்பருப்புசோறு செய்யலாம் வாங்க...
 தேவையான பொருட்கள்;
 பச்சை அல்லது புழுங்கல் அரிசி 400கிராம்,துவரம் பருப்பு 100கிராம்,புளி எலுமிச்சை அளவு,மிளகாய் வற்றல் பத்து அல்லது பதினைந்து,சீரகம்-ஒரு ஸ்பூன்,வெள்ளைப்பூண்டு ஐந்து பல்,சின்ன வெங்காயம் 100கிராம்,மஞ்சள் தூள் அரை ஸ்பூன்,கறிவேப்பிலை இரண்டு கொத்து,கடுகு இரண்டு ஸபூன்,உடைத்த உளுந்து ஒரு ஸ்பூன்,நல்லெண்ணெய்25கிராம்,தேங்காய் அரைமூடி,உப்பு தேவையான அளவு.
செய்முறை;பரமேஸ் டிரைவர்
 முதலில் மிளகாய் வற்றல்,சீரகம்,பூண்டு ஆகியவற்றை நன்கு மசித்துக்கொள்ளவும்,சாம்பார் வெங்காயத்தை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக்கொள்ளவும்,புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்,தேங்காயை துருவி வைக்கவும்,
 பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றவும்,அரிசியையும்,பருப்பையும் நன்கு கழுவி அதில் கரைத்த புளி,மசித்த மிளகாய்விழுது,வெங்காயம்,தேங்காய்த்துருவல்,மஞ்சள் தூள்,உப்பு,உருவிய கறிவேப்பிலை போட்டு கரண்டியால் கலக்கி பிறகு குக்கரை மூடி அடுப்பில் பத்து நிமிடம் சமைக்கவும்,சோறு வெந்தபிறகு இறக்கிவைத்து ஆவி அடங்கியபிறகு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,வடகம் தாளித்து குக்கரில் வெந்த சாதத்தில் கொட்டிக் கிளறவும்.பிறகு ஜவ்வரிசி வடகம் அல்லது அரிசி வடகம் தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்.சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக