புதன், 25 பிப்ரவரி, 2015

சாம்பார் செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.சாம்பார் செய்யும் முறை பற்றி காண்போம்.
தேவையானப் பொருட்கள்
துவரம்பருப்பு - 1/4 டம்ளர்
கத்திரிக்காய் - ஒன்று
முருங்கைக்காய் - ஒன்று
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
புளி - சிறிய லெமன் அளவு
அரைப்பதற்கு:
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
தக்காளி - ஒன்று (பெரியது)
தேங்காய் - ஒரு ஸ்பூன்
சாம்பார்பொடி - 4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தாளிக்க:
கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
வற்றல்மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை, மல்லி இலை - தேவைக்கு
 செய்முறை
முதலில் பருப்பை வேக வைக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும்.
வேகவைத்த பருப்புடன், 4 டம்ளர் நீர் விட்டு நறுக்கிய காய், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
அரைக்க கூறியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்து அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் விடவும்.
காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும். மல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக