சனி, 26 ஜூலை, 2014

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை போன்றவை அறிதல்.

1. தன்வினை வாக்கியம்

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.

(எ.கா) செல்வி பாடம் கற்றாள்.

முருகன் திருந்தினான்

2.பிறவினை வாக்கியம்

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.

‘பித்து’ ‘வித்து’ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) ஆசிரியை பாடம் கற்பித்தார்
அவன் திருத்தினான்

தன்வினை ------- பிறவினை
திருந்தினான் ------- திருத்தினான்
உருண்டான் ------- உருட்டினான்
பயின்றான் ------- பயிற்றுவித்தான்
பெருகு ------- பெருக்கு
செய் ------- செய்வி
வாடு ------- வாட்டு
நடந்தான் ------- நடத்தினான்
சேர்கிறேன் ------- சேர்க்கிறேன்
ஆடினாள் ------- ஆட்டுவித்தாள்
பாடினான் ------- பாடுவித்தான்
கற்றார் ------- கற்பித்தார்
தேடினான் ------- தேடுவித்தான்
உண்டாள் ------- உண்பித்தாள்
அடங்குவது ------- அடக்குவது

3.செய்வினை வாக்கியம்

ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.

(எ.கா) பாரதியார் குயில் பாட்டைப் பாடினார்.
தச்சன் நாற்காலியைச் செய்தான்
அவள் மாலையைத் தொடுத்தாள்
ராதா பொம்மையைச் செய்தாள்

4.செயப்பாட்டு வினை வாக்கியம்

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
(செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)

தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..


விடாமுயற்சி
************

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln.

வெற்றியாளர்
************

வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த
முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
- Napoleon Hill.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers.

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
- George Bernard Shaw.

வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்

தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

எதிர்ச்சொல்


மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.அனைவரையும் வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறோம்.
எதிர்ச்சொல்
***********

மருவுக * ஒருவுக கடுவன் * மந்தி
மேதை * பேதை அருகே * தொலைவு
தன்மை * வெம்மை ஆடுஉ * மகடுஉ
மன்னிப்பு * ஒறுப்பு ஆகாது *போகாது
அருகு * பெருகு இன்சொல் * வன்சொல்
அண்மை * சேய்மை இயன்ற * இயலாத
முனிவு * கணிவு பகட
்டு * எளிமை
வழுத்தல் * இகழ்தல் தொண்மை * புதுமை
வளர்ச்சி * தளர்ச்சி ஆதி * அந்தம்
அருள் * மருள் இன்சொல் * வனசொல்
பனையளவு * திணையளவு நஞ்சு * அமிர்தம்
ஆழ * மிதப்ப குடியரசு * முடியரசு
எந்தை * நொந்தை அமைதி * குழப்பம்
மருள் * தெருள் மலர்தல் * கூம்புதல்
தொகுத்து * பகுத்து இறுக்கம் * தளர்வு
நல்லார் * அல்லார் சுருக்கம் * விரிவு
தளிர் * சருகு ஓடுமீன் * உறுமீன்
ஆண்டான் * அடிமை மேலை * கீழை
சொந்தம் * அந்நியம் வளர்ந்து * தளர்ந்து
இழப்பு * ஆதாயம் இடும்பை * இன்பம்
பண்புடை * பண்பிலா மூதேவி * சீதேவி
களிப்பு * துயரம் வடமொழி * தென்மொழி
தமயன் * தமக்கை பழமொழி * புதுமொழி
இம்மை * மறுமை தனிமை * குழு

எதுகை, மோனை, இயைபு


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். வீரமாமுனிவரை நினைவில் போற்றும்விதமாக வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல்
***********************************************
அடி மோனை

அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.

(எ.கா) ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

இணைமோனை 1, 2

ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணைமோனை ஆகும்.

(எ.கா) “இறந்தார் இறந்தாரனையர் சினத்தை”

பொழிப்பு மோனை 1, 3

ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு மோனை ஆகும்.
(எ.கா) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஓரூஉ மோனை 1, 4

ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஓரூஉ மோனை ஆகும்.

(எ.கா) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

கூழை மோனை 1, 2, 3

ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் மோனை கூழை மோனை ஆகும்.

(எ.கா) “கல்விக்கரையில கற்பவர் நாற்சில”

கீழ்க்கதுவாய் மோனை 1, 2, 4

ஓரடியில் முதல்சீர், இரண்டாம்சீர், நான்காம்சீர் போன்றவற்றில் வரும் மோனை கீழ்க்கதுவாய் மோனை ஆகும்.

(எ.கா) “அற்றார் அழிபசிதீர்த்தல் அஃதொருவன்”

மேற்கதுவாய் மோனை 1, 3, 4

ஓரடியில் ஒன்று, மூன்று, நான்காம் சீர்களில் வரும் மோனை மேற்கதுவாய் மோனை ஆகும்.

(எ.கா) “வானின்று உலகம் வழங்கி வருதலால்”

முற்று மோனை

ஓரடியில் நான்கு சீர்களிலும் வரும் மோனை முற்று மோனை

(எ.கா) கற்க கசடற கற்பவை கற்றபின்

அடி எதுகை

அடி தோறும் முதல் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை ஆகும்.

(எ.கா.)பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கு
ஏழையினைக் கண்டனம் எனமே”

இணை எதுகை 1, 2

ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் எதுகை இணை எதுகை ஆகும்

(எ.கா) “இன்மையுள் இன்மை விருந்தொறால்”

பொழிப்புஎதுகை 1, 3

ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் எதுகை பொழிப்பு எதுகை ஆகும்.
(எ.கா) “தோன்றின் புகலோடு தோன்றுக”

ஒரூஉ எதுகை 1.4

ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் எதுகை ஓரூஉ எதுகை ஆகும்.

(எ.கா) “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்”

கூழைஎதுகை 1, 2, 3

ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.

(எ.கா) “பற்றுக பற்றற்றான் பற்றிணை”

கீழ்க்கதுவாய் எதுகை 1, 2, 4

ஓரடியில் முதலாம் இரண்டாம், நான்காம் சீர்களிலும் வரும் எதுகை கீழ்க்கதுவாய் எதுகை ஆகும்.

(எ.கா) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

மேற்கதுவாய் எதுகை 1, 3, 4
ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்களில் வரும் எதுகை மேற்கதுவாய் எதுகை ஆகும்.

(எ.கா) “கற்கக சடற கற்பவை கற்றபின்”

முற்று எதுகை 1, 2, 3, 4

ஓரடியில் நான்கு சீர்களிலும் எதுகை வந்தால் அது முற்று எதுகை ஆகும்.

(எ.கா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

இயைபுத்தொடை

ஒரு செய்யுளின், அடிகளிலும் சீர்களிலும் அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடையாகும்.

(எ.கா) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

. நன்றி

ஞாயிறு, 4 மே, 2014

கனக சுப்ரமணி



பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

...எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும். அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. 

அப்படி என்னதான் செய்கிறார்?
கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார். இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துவோம் அவரை.. 
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்வோம் செய்தியினை.. 

[நன்றி : The Hindu]
பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?
நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.
...எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாத்திக்கொண்டு என்று...
ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும். அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பிக்கிறது..
அப்படி என்னதான் செய்கிறார்?
கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......
ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார். இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துவோம் அவரை..
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்வோம் செய்தியினை..

[நன்றி : The Hindu]

தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 திரு குணசீலன் அவர்களுக்கு நன்றி.

          தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர்.
பலரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்போருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்து
********************
அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!

சிந்தா மணிச்சுடரே!
செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
வாழ்த்தி வணங்குவமே


- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர். 

பலரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்போருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தாய் வாழ்த்து

********************
அன்னை மொழியே
      அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
      முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
      கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
      மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே!

      திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
      எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
     மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
     முடிதாழ வாழ்த்துவமே!

சிந்தா மணிச்சுடரே!

       செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
       தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
      சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
      மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில்

     சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
     சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
      நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
      வாழ்த்தி வணங்குவமே

                      
   - பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

வாங்க..பேசலாம்..! ரவி தங்கதுரை

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.நம்ம மரியாதைக்குரிய  ரவி தங்கதுரை ஐயா  அவர்கள் முகநூலில் ''வாங்க. பேசலாம் ....'' என்னும் தலைப்பில் விவாதமேடை அமைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.நீங்களும் ஒருமுறை விவாதத்தில் கலந்துகொள்ளலாமே!
பேசலாம்..  வாங்க..!

கடந்த இரு வாரங்களின்  விவாத மேடையைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக  நாளையும் நாம் மற்றொரு தலைப்பின் கீழ் விவாதிக்க இருக்கிறோம்.

விவாதங்கள் தொடங்குவதற்கு முன் நமது விவாத மேடைப் பற்றி, ஏற்கனவே நெறிமுறைப் படுத்தப்பட்ட  சில விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.

1. தங்கள் கருத்துக்கள் தமிழில் அல்லது தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
2. விவாதங்கள் அனைத்தும்  பொதுவில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு நமது எழுத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்..
3. பதிவின் நோக்கம் திசை மாறும் வகையில் மாற்றுக் கருத்துக்களை விவாதிப்பதும், தலைப்பைப் பற்றி ஆலோசிப்பதும் மறுக்கப் படுகிறது.
4. விவாதங்களின் நடுவே அரட்டை அடிப்பதையும், நலம் விசாரிப்பதையும், காலை, மதிய மற்றும் இரவு வணக்கங்கள் சொல்வதையும் கண்டிப்பாக தவிர்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
5. விவாதங்களில் கலந்துக் கொள்ளும் தோழர்கள் மற்றும் தோழிகளின் மனம் வருத்தப்படாதவாறு வார்த்தைகளையும், எழுத்துக்களையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
6. விவாதங்களில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் நண்பர்கள் விரும்பினால்,  Tag செய்யப்படும்.
7. நமது விவாதங்களில் மதம், சாதியைக் குறிப்பிட்டுவதை அறவேத் தவிர்த்து விடுங்கள்.
8. விவாதங்கள் நாளைக் காலைத் தொடங்கி, கிட்டத்தட்ட 24 மணி நேரம் நீடிக்கும்.  
9. நண்பர்கள் அனைவரும் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ளலாம்.
10. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பைப் பற்றி கருத்துத் தெரிவிக்கலாமேத் தவிர, விவாதிப்பதைத் தவிர்த்து விடலாம்..  

- ரவிதங்கதுரை
  






பேசலாம்.. வாங்க..!
கடந்த இரு வாரங்களின் விவாத மேடையைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக நாளையும் நாம் மற்றொரு தலைப்பின் கீழ் விவாதிக்க இருக்கிறோம்.
விவாதங்கள் தொடங்குவதற்கு முன் நமது விவாத மேடைப் பற்றி, ஏற்கனவே நெறிமுறைப் படுத்தப்பட்ட சில விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.
1. தங்கள் கருத்துக்கள் தமிழில் அல்லது தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
2. விவாதங்கள் அனைத்தும் பொதுவில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு நமது எழுத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்..
3. பதிவின் நோக்கம் திசை மாறும் வகையில் மாற்றுக் கருத்துக்களை விவாதிப்பதும், தலைப்பைப் பற்றி ஆலோசிப்பதும் மறுக்கப் படுகிறது.
4. விவாதங்களின் நடுவே அரட்டை அடிப்பதையும், நலம் விசாரிப்பதையும், காலை, மதிய மற்றும் இரவு வணக்கங்கள் சொல்வதையும் கண்டிப்பாக தவிர்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
5. விவாதங்களில் கலந்துக் கொள்ளும் தோழர்கள் மற்றும் தோழிகளின் மனம் வருத்தப்படாதவாறு வார்த்தைகளையும், எழுத்துக்களையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
6. விவாதங்களில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் நண்பர்கள் விரும்பினால், Tag செய்யப்படும்.
7. நமது விவாதங்களில் மதம், சாதியைக் குறிப்பிட்டுவதை அறவேத் தவிர்த்து விடுங்கள்.
8. விவாதங்கள் நாளைக் காலைத் தொடங்கி, கிட்டத்தட்ட 24 மணி நேரம் நீடிக்கும்.
9. நண்பர்கள் அனைவரும் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ளலாம்.
10. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பைப் பற்றி கருத்துத் தெரிவிக்கலாமேத் தவிர, விவாதிப்பதைத் தவிர்த்து விடலாம்..

- ரவிதங்கதுரை