வியாழன், 12 மார்ச், 2015

உப்புக் கண்டம் போடலாம் வாங்க...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தமிழ் மன்றத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். ஆட்டு இறைச்சி உட்பட மாமிசங்களை உப்புக்கண்டம் போடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்;
 ஆட்டு இறைச்சி - அரை கிலோ,
இஞ்சி எலுமிச்சை அளவு,
பூண்டு 10பல்,
காய்ந்த மிளகாய் - 10,
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ற அளவு,
 செய்முறை;
 இஞ்சி,பூண்டு,மிளகாய்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
ஆட்டு இறைச்சியை சுமாரான துண்டுகளாக நறுக்கி கழுவிக்கொள்ளவும். பிறகு அரைத்த விழுதினை மட்டனில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
அதனை கெட்டியான நூலில் கோர்த்து வெயிலில் நன்றாக காய வைக்கவும்.
 காய்ந்த பிறகு எடுத்து காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். 
தேவைப்படும்போது உப்புக்கண்டத்தை எடுத்து லேசாக தட்டி எண்ணெயில் பொறித்து எடுத்து சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக